இராகம்: கல்யாணி | தாளம்: ஆதி பல்லவி:இல்வாழ்க்கையைப் போல நல்வாழ்க்கை வேறேது
இதம் பெற நீயறிவாய் உலகினில்
அநுபல்லவி:"இல்வாழ்வோன் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்றதுணை" என்றே சொல்லும் குறள்
சரணம்:பழியேதும் தொடாராத வழிசென்று பொருள் தேடிப்
பகுத்துண்டு வாழும் மனப் பாங்குடனே
பரிவாக விருந்தோம்பிப் பலபேர்க்கும் துணையாகிப்
படர்கின்ற கிளையோடும் தான் வாழவே
அழியாத புகழ்மேவி அறங்கூறும் வழிநாடி
அனைவோரும் மதிக்கும் இல்லறம் சூழவே
அடுத்தோர்கள் பசித்துன்பம் அது கண்டிரங்கும் உண்மை
அன்பருள் அகத்திணை
நலமது உயர்ந்திட
அணுகி நாட்டமுடன்
முயன்றிடப் பயன்படும்