இராகம்: சிந்துபைரவி | தாளம்: ஆதி கண்ணிகள்:புல்லறி வாண்மையே ஏன் பிறந்தாயோ
பூமியில் பிறந்ததன் பயன் அடைந்தாயோ
நல்லோர்கள் சொல்வதைக் காதிற் கேளாயோ
நான் எனும் அகந்தைக்கே பிறப்பிடம் நீயோ
அறிவு கொண்டே குற்றத்தைக் கலையாத போழ்தில்
ஆடை கொண்டே உடலை மறைப்பதும் ஏனோ
அறியாத நூல்களையும் அறிந்ததாய் மேற்கொண்டால்
அறிந்ததும் ஐயமாய்ப் போகும் அன்றே
பூவாமல் காய்த்திடும் மரமுமே உள்ளதைப்
புல்லறி வாண்மை நீ உணர்ந்திலையோ
ஏவவும் செய்கலான் தான் தேறான் அவ்வுயிர்
போகும் அளவும் ஒரு நோயல்லவோ
அரிய மறை பொருளைக் காத்துக் கொள்ளாமலே
அல்லலில் சிக்கியே மடிவாயோ
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மை வையாதுலகு எனும் குறளே