இராகம்: காம்போதி | தாளம்: ஆதி பல்லவி:பெண்ணின் பெருமையை
எண்ணி நாம் மதித்திடப்
பேசும் திருக்குறள் காண்!
பொய்யா மொழியார்
பேசும் திருக்குறள் காண்!
அநுபல்லவி:கண்ணின் மணியாய்க் கனியின் சுவையாய்க்
கலந்துயிர் வாழ்க்கையில்
மலர்ந்து நலம் விளைக்கும்
சரணம்:தன்னையும் காத்துத் தன் கணவனையும் காத்து
தகுதியுடைய புகழ் மிகுதியும் சேர்த்து
பொன்னைப் பொருளைவிட மென்மேலாய்ப்
போற்றும் தன் கற்பினை ஏற்றும் திண்மை மிகுந்த
நினைத்தபடி நடக்கும் ஆடவர் தம்மை
நேர்வழிப் படுத்தியே சீர்செய்யும் பெண்மை
"மனைத்தக்க மாண்புடையளாகித் தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத்துணை" என்றே மணம் கமழும்