இராகம்: வாசஸ்பதி | தாளம்: ரூபகம் பல்லவி:கைபோல் வந்தே உதவி செய்திடும் நட்பு
காலமறிந்தும் கடமை புரிந்தும்
அநுபல்லவி:கைபோலவும் கண்போலவும்
கனிந்தும் துணிந்தும் விரைந்தும் பணிந்தும்
சரணம்:புணர்ச்சியோடும் பழக வேண்டாம்
புனைந்துரைகளும் கூற வேண்டாம்
உணர்ச்சி தான் நட்பாம் கிழமை தரும்
ஒளிதரும் பிறைமதி போலவும் வளரும்
நவில் தொறும் நூல் நயம் போலுமே
பயில் தொறும் பண்புடையார் தொடர்பாம்
புவி பெறும் குறள் நட்பதன் நிலையே
போதெல்லாம் உதவும் தீதெல்லாம் களையும்