இராகம்: சாமா | தாளம்: ஆதி பல்லவி:முகமே பார்க்கும் கண்ணாடி - இதை
முதல் முதலாகவே அறிவோம் நாடி
அநுபல்லவி:அகமே மலர்ந்தால் அழகாய்த் தெரியும்
அல்லாமல் சினந்தால் அப்பொழுதே எரியும்
சரணம்:எண்ணும் பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும்
யாது கொடுத்தும் குறிப்புணர்வாரையே அழைக்கும்
"நுண்ணியம் என்பர் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லதில்லை பிற" என்னும் திருக்குறள் நூல்