இராகம்: ஆரபி | தாளம்: ரூபகம் பல்லவி:உயிரைக் கொன்று தின்னலாகுமா - நீ
உடலைக் காக்க
அநுபல்லவி:பயிரைக் காக்கும் உழவன் போல
பசுவைக் காக்கும் ஆயன் போல
உயிரைக் காக்கப் பிறந்த நீங்கள்
உள்ளங் கொண்டே ஊனை விரும்பி
சரணம்:தன்னூன் பெருக்கற்குத் தான் பிறிதூன் உண் பான்
தன்னிடம் நல்லருள் தங்குமோ; என்றும் தான்
தின்னும் பொருட்டுயிர்க் கொல்லா துலகெனின்
தேவை என்றே விலைக்காகவும் கொல்வரோ
சேரும் உணவில் புலால்தனைக் கொள்ளாதே
தேகத்தின் புண்ணது தீண்டவும் தீண்டாதே
கூறும் ஓராயிரம் வேள்வியினும் ஒன்றைக்
கொன்று தின்னாமையே நன்றென்னும் நம்குறள்