நல்ல தோணியில் ஏறிச் சென்றால், கரையை அடையலாம். இல்லையானால் பாறையில் மோதி தோணி பிளந்துபோகும்.
அதுபோல, வாழ்க்கையில் யாசகம் பெற்று வாழலாம் என்று நினைத்து, ஒருவனிடம் சென்று யாசகம் கேட்கிறான். ஆனால் அவனும் வஞ்சனையால் இல்லை என்று சொல்லிவிடுகிறான்.
அதனால், யாசகம் கேட்டு போனவன் மனம் நொந்து போகிறான். அவனுடைய வாழ்வு அழிகிறது.
வாழ்வில் முயற்சி என்னும் தோணியைத் துணையாக கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.