மக்கள் அனுபவிப்பதற்கு நிழலும், நீரும் முக்கியம். நிழலும் இனியது; நீரும் இனியது.
ஆனால், அந்த நிழலும், நீரும் உடல்நலம் காக்க உதவாமல், நோய் உண்டாக வதாக இருந்தால், அப்போது அனுபவிக்கும் இனிமையைப் பொருட்படுத்தாமல், பின்னால் வரும் நோயையே கருதி நீக்கி விடுகிறோம்.
அதுபோல, கற்றத்தாராக இருந்தாலும், இனியவர் போல் நடித்து தீமை செய்வார்களானால், அவர்களை உடனே விலக்கிவிட வேண்டும்.
வெளிப்படையாக பகைத்து நிற்பவர்களை கண்டு அஞ்ச வேண்டியதில்லை. ஏனெனில், அவர்களை பகைவர்கள் என்று அறிந்து, எப்போதும் முன்னெச்சரிக்கையாக தற்காப்பு செய்து கொள்ள முடியும். ஆனால், உறவு போல் தோன்றி, உட்பகை கொண்ட பகைவர்கள் தொடர்புக்குத்தான் பயப்பட வேண்டும். ஏனெனில், அவர்கள் நம்மவர்கள் என்று கருதி முன்னெச்சரிக்கை இல்லாமல், அகப்பட்டுக் கொண்டு துன்புறுவது எளிது.