காலம் காலமாக பல பெரியோர்கள், தங்கள் வாழ்க்கையின் மூலம் உலகத்துக்கு எவ்வாறு பயன்பட்டார்கள்?
அவர்கள் சுயநலமில்லாமல், பொது நலத்திற்காகவே தொண்டு புரிந்து உதவினார்கள்.
அதுபோல, ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் பொதுமக்களுக்கு பயன்படும்படி அமைத்துக்கொள்வது அறிவின் செயல் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இதை வேறு விதமாகவும் தெளியலாம்.
"காலத்திற்கு ஏற்ப, இடத்துக்குத் தக்கபடி, உலகத்தார் எவ்வாறு வாழ்கிறார்களோ, அவ்வாறு அவர்களை ஒட்டி, தன் வாழ்க்கையை மக்களுக்கு பயன்படும்படி அமைத்துக் கொள்வது, அறிவுடையோர் செயல் ஆகும்."