ஒருவனுடைய வீட்டில், இனிப்பான - சுவையான பலன் இருக்கிறது. ஆனால், அவன் அதை தின்னாமல், கசப்பான - புளிப்பான காயை எடுத்து தின்கிறான். எவனாவது காயை எடுத்து தின்பானா?
அதுபோல, கனிவான - இனிமையான வார்த்தைகள் பேசினால், காரியம் சாதகமாக முடியும்.
அதைவிட்டு, கடுகடுப்பாக பேசி, விரோதத்தை ஏற்படுத்தி, காரியத்தையும் கெடுத்துக்கொள்வது ஏன்?
பகைவனாக இருந்தாலும், அவனிடம் கனிவாகப் பேசினால், அவன் மனம் மாறி நண்பனாக ஆகிவிடுவான்.