Raga: ஆநந்தபைரவி | Tala: ஆதி பல்லவி:கூடா நட்பே நீ கொள்ளாதே
கூறும் இடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பெனும் கருத்துரை
அநுபல்லவி:நாடாளு வோரிடத்தும் நண்பரைப்போல் நடிப்பார்
நல்ல நூல்கள் பல கற்ற போதிலும்
சொல்ல நல்ல மனம் இல்லை ஆகையால்
சரணம்:பழுதற நட்டார் போல் நல்லவையே சொல்லினும்
பண்பில் ஒட்டாதவர் சொல் ஒல்லை உணரப்படும்
தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்தே வள்ளுவர் சொன்னார்
அதையறிந்து பகையணுகி டாதபடி
எதையும் கண்டுபிடி இனிமையாக நடி
எண்ணம் மறைத்தவர் எண்ணம் சாகவும்
திண்ணமாக மக்களாட்சியில் வாழவும்