உயர்ந்தோர் நாணத்தையே பாதுகாப்பான வேலியாகக் கொள்வார்கள். பழி பாவங்கள் ஏற்படாமல், பாதுகாப்பாக அமைவது நாணம்.
இதனால், நாணமும் பூமியும் சமமாக்கி, இந்த இரண்டில் எது வேண்டும் என்றால், பழி பாவங்கள் புகும் வழியாகிய பூமியை உயர்ந்தோர் விரும்பமாட்டார்கள்.
அதாவது, நாணுகின்றவர்களே நாணத்திற்கு உறைவிடம் என்று உலகம் மதிக்கும்.
அதனால், அத்தகைய நாணத்தை வேலியாகக் கொள்ளாமல், உலகத்தின் பொதுவாழ்க்கையை விரும்பமாட்டார்கள்.