யானை பிடிப்பவர் தன்னுடைய பழக்கப்பட்ட யானையைக்கொண்டு, காட்டில் திரிகின்ற வேறு புது யானைகளை பிடிப்பதற்கும், அதற்கான குழிகள் அமைத்து ஏமாற்றி, அவற்றிலே யானைகளை விழச்செய்து, பிடித்து விடுகிறார்கள்.
அதுபோல, தனக்கு விருப்பமான செயலை நிறைவேற்றிக் கொள்வதற்காக பிறருக்கு பிரியமான செயலைச் செய்து, அதன்மூலம் முடித்துக் கொள்ள வேண்டும்.
அதாவது, ஒரு காரியத்தை செய்யும் பொழுதே அதனோடு தொடர்புடைய காரியங்களையும் உடனே செய்து, முடித்துக்கொள்வது நன்மை தரும்.