அழுக்கு, மாசு முதலியவற்றால் ஒளி மங்கிய தங்கத்தை நெருப்பில் இட்டு காய்ச்ச அழுக்கு நீங்கி, மெழுகு ஏறும். ஒளிவீசும் காண்பவருக்குக் களிப்பு ஊட்டும்.
அதுபோல, எத்தகைய துன்பங்கள், எத்தனை இடையூறுகள், அடுத்து அடுத்து வந்த போதிலும், அவற்றைப் பொருட்படுத்தாமல், தவத்தை மேற்கொள்பவருக்கு, தவ வலிமை அதிகரித்து, ஞான ஒளி உண்டாகும். பெருமை ஏற்படும்.
துன்பத்துக்கு அஞ்சாதவரே தவம் செய்யும் ஆற்றல் உடையவர்.
(தவம் என்பது தமக்கு வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு எவருக்கும் எந்த உயிருக்கும் துன்பம் நேரிடாமல், ஐந்து ஆசைகளை அடக்கி உறுதியுடன் நடப்பதே ஆகும். அது மேலான வாழ்வு நெறி என்பார்கள்.)