భయోత్పన్నత

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.   (௫௱௬௰௧ - 561)
 

తప్పు నరసి మరల దప్పుజేయని రీతి
శిక్షనిచ్చు రాజశేఖరుండు. (౫౬౧)

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.   (௫௱௬௰௨ - 562)
 

బలముగాను పూని సులువుగా శిక్షింత్రు
నీతిమార్గ మెరుగు నృపకులమ్ము. (౫౬౨)

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.   (௫௱௬௰௩ - 563)
 

దిన దినమ్ము ప్రజలు దిగులొంద బాలించు
ప్రభువు చెడగ జూడవలదు దినము. (౫౬౩)

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.   (௫௱௬௰௪ - 564)
 

దుష్టడంచు ప్రజలు దూరంగ నారాజు
వెక్కుదినము లుండి వెరగలేడు. (౫౬౪)

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.   (௫௱௬௰௫ - 565)
 

చూడ నలవిగాక చూచిన చిట్లుంచు
ధరణి విభుని సిరికి దయ్యమండ్రు. (౫౬౫)

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.   (௫௱௬௰௬ - 566)
 

దబ్బరమ్ములాడు దాక్షిణ్యరహితుని
వద్ద నున్న కలిమి వృద్ధికాదు. (౫౬౬)

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.   (௫௱௬௰௭ - 567)
 

క్రమముగాని శిక్ష కఠువైన మాటలు
ఱంపమగును గోయ రాజు బలము. (౫౬౭)

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு.   (௫௱௬௰௮ - 568)
 

ఆదుకొనగ నుండు నాత్మియులను రాజు
కోప పడినఁగలిమి రూపు మాయు. (౫౬౮)

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.   (௫௱௬௰௯ - 569)
 

కుదుటబరచుకున్న మొదటనే సైన్యమ్ము
నెదిరి రాక నెఱిగి యదిరి చచ్చు. (౫౬౯)

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.   (௫௱௭௰ - 570)
 

దుష్టజనుల గూడి దుర్నీతిపరుడైన
ప్రభువె చాలు భూమి భారమునకు. (౫౭౦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சாரங்கா  |  Tala: ஆதி
பல்லவி:
அம்பை விட்டு பால் கறப்பதா?
ஆகா தென்றாலும்
அஞ்சிட வெங்கோல் பிடிப்பதா?

அநுபல்லவி:
அம்பெதற்குக் கன்றை விட்டால்
பால் கெடுக்கும் தானே
அச்ச மின்றி மக்கள் வாழ
அன்பு செய்வீர் கோனே

சரணம்:
மண் குதிரையை நம்பி ஆற்றினில் இறங்கும்
மதிகெட்ட சேவகரால் எதுதான் துலங்கும்?
கண்கெட்ட பின்னரோ கதிரவன் வணக்கம்
கருதும் வெம்போர் வருமுன் காப்பதே இணக்கம்

தான் செய்த குற்றத்திற்குப் பிறரையே கடிந்தும்
தன்மையிலாக் கொடிய பேயெனத் திரிந்தும்
கோன் வெருவந்த செய்யின்குடிகள் உளம் துடிக்கும்
குமுறும் எரிமலையாய் ஒரு நாளது வெடிக்கும்

கடுஞ்சொல்லன் கண்ணிலனாயின் நெடுஞ் செல்வம்
நீடின்றி யாங்கே கெடும் என்றே குறளும் சொல்லும்
படும் துன்பம் நீக்கும் முறைபார்த்தே மெல்ல எறிக
பண்புறும் கண்ணோட்டத்தின் பாங்கினையும் பெறுக




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22