అపరిగ్రహము

கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்.   (௲௬௰௧ - 1061)
 

మనసు సచ్చియిచ్చు మనుజల కడనైన
నడుగరామి కోటికైన మేలు. (౧౦౬౧)

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.   (௲௬௰௨ - 1062)
 

అడిగి దినఁగ జేయ నజుడైన గానిమ్ము
తిరిగి తిరిగి చెడుత దిరిపమెత్తి. (౧౦౬౨)

இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.   (௲௬௰௩ - 1063)
 

పేదరికము బాయఁ బిచ్చమే గతియన్న
నంతకన్న నీచుఁ డవని లేడు. (౧౦౬౩)

இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.   (௲௬௰௪ - 1064)
 

బ్రతుకు శూన్యమైన బ్రతిమాలి యడుగని
సద్గుణంబు వ్యాస్తి సర్వజగతి. (౧౦౬౪)

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.   (௲௬௰௫ - 1065)
 

గంజినిళ్ళె యైన కష్టించి చమటోడ్చి
యారగింప రుచికి నంతులేదు. (౧౦౬౫)

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.   (௲௬௰௬ - 1066)
 

ఆవుకైన నీళ్ళ నడుగరాదొక్కని
నాల్కగొప్ప కఫుడె నాశనమ్ము. (౧౦౬౬)

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.   (௲௬௰௭ - 1067)
 

యాచకాళి నెల్ల యాచించి వేడెద
నడుగవలదు లోభులైన వారి. (౧౦౬౭)

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.   (௲௬௰௮ - 1068)
 

యాచకమను నావ దాచుట యను బండ
తగిలి సాగలేక పగిలిపోవు. (౧౦౬౮)

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.   (௲௬௰௯ - 1069)
 

తలచినంత మనసు ద్రవియించు యాచింప
దాచుటంతకన్నఁ దారుణమ్ము. (౧౦౬౯)

கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.   (௲௭௰ - 1070)
 

అడగ నెంచ గుండె తడఁబడు లేదన్న
నాగిపోత నిలచు టబ్బురమ్మె. (౧౦౭౦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: ஜோன்புரி  |  Tala: ஆதி
பல்லவி:
இரந்தும் உயிர் வாழ்வதா?
இரவச்சம் சூழ்வதா?

அநுபல்லவி:
இறைவா நின் படைப்பில் இந்த
இழி நிலையும் காண்பதா

சரணம்:
கரவாமல் உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடிபெரும் என்றே அறிந்த பின்னும்

மானம் கெடுமோ என்று மனத்தினில் அச்சம் கொண்டு
தானத்திலே இரங்கி ஈனத்தை ஏற்க நின்று

வாழும் வழியற்றாலும் சூழும் நிலை கெட்டாலும்
தாழும்படி இரவாச் சால்பே உலகின் மேலாம்

பாவிகளைப் புகழ்ந்து பாடியும் பயன் என்னவோ
ஆவிற்கு நீர் என்றாலும் நாவிற்கிழி வல்லவோ

தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினியதில் வெனும் குறள் உணர்ந்தும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22