జూదరి

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.   (௯௱௩௰௧ - 931)
 

చేప గాలమందు జీక్కెడు విధమౌను
గెలుపు సిద్ధమైన వలదు జూదు. (౯౩౧)

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.   (௯௱௩௰௨ - 932)
 

ఒకటి వచ్చినట్టి యుత్సాహమున నూరు
వదలు వాని బ్రతుకు బదిలమగునె? (౯౩౨)

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.   (௯௱௩௰௩ - 933)
 

దొల్లి పోవువాని దొడ్డగా నమ్మన
ద్రవ్యమెల్ల నెదిరి దారిబట్టు. (౯౩౩)

சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.   (௯௱௩௰௪ - 934)
 

కీడుఁ మూడఁజేసి కీర్తిని పోగొట్టి
పేదవడఁగ జేయుఁ జూదమొండె. (౯౩౪)

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.   (௯௱௩௰௫ - 935)
 

హస్తకౌశలమ్ము నక్షపాటమున్న
పేదరికమె వచ్చుఁ జూదమాడ. (౯౩౫)

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.   (௯௱௩௰௬ - 936)
 

తనిక బెక్కు బాధ లనుభవింప దగెను
జూదమందు జిక్కి చొక్కు నతడు. (౯౩౬)

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.   (௯௱௩௰௭ - 937)
 

తరతరాల నుండి తనదాక వచ్చిన
యాస్తి జూదమాడ నంతరించు. (౯౩౭)

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.   (௯௱௩௰௮ - 938)
 

కల్ల లాడజేసి కనికరమ్ము బాపు
నాంది జూదమగును నరకమునకు. (౯౩౮)

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.   (௯௱௩௰௯ - 939)
 

కూడు గుడ్డ సొత్తు కోవిదత్వము కీర్తి
మంట గలియు జూద మంటుకొనిన. (౯౩౯)

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.   (௯௱௪௰ - 940)
 

ఆడుచుండు జూద మోడంగ నోడంగ
బాధలన్ను నాశ బ్రతుకునందు. (౯౪౦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: ஸ்ரீ ரஞ்சனி  |  Tala: ரூபகம்
பல்லவி:
சூதினும் வறுமை தருவதொன்றில்லை - ஒரு
சுகமும் இல்லை துன்ப எல்லை

அநுபல்லவி:
தீதிதுவும் பொது மாதும் மதுவும் போல்
சிறுமை பல செய்து சீரழித்திடும்

சரணம்:
பகடை பன்னிரன்டு பாய்ச்சிகை உருண்டு
பாயும் தாயம் சீட்டாடுவார்
பண்பும் அற்றிட நண்பும் கெட்டிட
பணயம் வைத்திடக் கூடுவார்
மிகவும் ஒன்றெய்தி நூறிழப் பினும்
மீளும் நல்வழி காண்பரோ
மீண்டும் மீண்டுமே பொருளிழப்பார்
தூண்டில் மீன்களாய்ப் பரதவிப்பார்

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகியார்
கல்வி உணவுடைச் செல்வம் புகழ் நிறை
கருதும் ஐந்துமே அடைந்திடார்
அவல நிலையிலோர் கவளமாகிலும்
அருந்தியே பசி ஆறிடார்
ஆதலால் இந்தச் சூதின்மேல் வைத்த
ஆசையற விடுவீர்
குறளைத் தொடுவீர்
அருளைப் பெறுவீர்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22