బాహ్యవేషము

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.   (௨௱௭௰௧ - 271)
 

ధూర్తుఁడొప్పిదముగ మూర్తిభనించిన
నతని చేష్ట లెఱిగి యాత్మ నవ్వు. (౨౭౧)

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.   (௨௱௭௰௨ - 272)
 

పొగడవచ్చు తన్ను గగనము దాహంగ
నందులోని సత్య మాత్మ కెఱుక. (౨౭౨)

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.   (௨௱௭௰௩ - 273)
 

పొలము మేయునట్లె పులితోలుతో నావు
తిరిపమునకు జేయు తీవ్ర తపము. (౨౭౩)

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.   (௨௱௭௰௪ - 274)
 

వలలు పన్ను విధము వ్యాధుండు పొదనుండి
దుష్ఠుఁడొదిగి చేయు దొంగ తపము. (౨౭౪)

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்.   (௨௱௭௰௫ - 275)
 

చంపుకొనక నాశ సన్యాసి ననునాడు
దిక్కు మొక్కు లేక దిగులువడును. (౨౭౫)

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.   (௨௱௭௰௬ - 276)
 

విగ్రహింప లేక నియతాత్ము లట్లుండు
వారికన్న ద్రోహపరులు లేరు. (౨౭౬)

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து.   (௨௱௭௰௭ - 277)
 

ఎఱ్ఱని గురిగింజ కెటులుండు నల్లుపట్లు
మంచివారి యందు మసి యొకింత. (౨౭౭)

மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.   (௨௱௭௰௮ - 278)
 

మనను తేటగాక మాటిమాటికి నీట
మునిఁగి తేలు జనులు మూల మూల (౨౭౮)

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.   (௨௱௭௰௯ - 279)
 

ములుకు బాధనిచ్చు ముచ్చటగానుండి
వీణ ముదమునిచ్చు కోణయయ్య. (౨౭౯)

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.   (௨௱௮௰ - 280)
 

గొరగ వద్దు పెంచుకొనఁగ వద్దు జగతి
దోసమన్న దాని త్రోసిపుచ్చ. (౨౮౦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: தேவமனோகரி  |  Tala: ஆதி
பல்லவி:
வீணில் மயங்காதே - மனமே
வெறும் வெளித்தோற்றத்தில்
பெறும் மதியை இழந்தே

அநுபல்லவி:
காணும் சின்னங்கள் பூணும் அணிபணிகள்
மாணல்ல மனிதர்க்கு
மனத் தூய்மையே வேண்டும்

சரணம்:
வஞ்ச மனமுடையோர் பொய்யொழுக்கமானத்து
வானுயர் தவக்கோலம் கொண்டாலும் பயன் ஏது
நஞ்சினுமே கொடிய நெஞ்சிரக்கமில்லாதார்
நடிப்புத் துறவைக்கண்டே ஞானிகள் இவர் என்று

மறைந்து புதரில் வேடன் வலைவீசி நிற்பதுபோல்
வலிவு இல்லாத பசு புலித்தோலைப் போர்த்தது போல்
நிறைந்த சடை முடியால் நீண்ட தாடி அங்கியால்
கரந்துயிர் பிழைக்கின்ற கபடர்களை அணுகி

அம்பு நேராயினும் அதன் தன்மையோ கொடிதாம்
யாழின் கொம்புதான் வளைவாயினுமே இனிதாம்
அம்புவியில் இவைபோல் அவரவர் செயல் பண்பாய்
அமைவது காட்டும் குறள் அறிவு பெற்றே தெளிவாய்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22