பசுவின் பால் நல்லது. நன்மை அளிக்கக் கூடியது ஆகும். ஆனால், அந்தப் பாலை ஊற்றி வைத்திருக்கும் பாத்திரம் கெட்டதானால்- அதன் தன்மையால் பால் கெட்டுப் போகும். ஒருவருக்கும் பயன்படாது.
அதுபோல, பண்பு இல்லாதவனிடம் இருக்கின்ற பெரும் செல்வம் மக்களுக்கு உதவாமல், சில சமயங்களில் தீமையான காரியங்களுக்கு கூட பயன்படும். அதனால், மிகப்பெரிய செல்வமும் பயன் இல்லாமல் போய்விடுகிறது.
பண்பாடு உள்ளவனிடமுள்ள செல்வம் தான், செல்வம் என்ற பெருமை மிக்க சிறப்பை பெரும்.