எனக்கு எந்த விதத்திலோ, எப்படியோ கஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அந்தக் கஷ்டம் நீங்க அவனுக்கு உதவி தேவைப்படுகிறது.
இந்த உதவியை அவனுக்கு செய்தால், தனக்கு என்ன லாபம்- பிரதி பிரயோசனம் கிடைக்கும் என்று எண்ணிப் பாராமல், ஒருவன் உதவி செய்கிறான்.
மனிதாபிமானத்தோடு, அவன் செய்த உதவியின் சிறப்பை- மென்மையின் பயனை அளந்து பார்த்தால், அது கடலை விடப் பெரிதாக, அளக்க முடியாதது ஆகும்.
உதவியினால், கஷ்டத்திலிஇருந்து நீங்கியவன், நன்றியோடு நினைத்துப் பார்த்தால் அதனால் கிடைத்த நன்மை கடலைவிட பெரிதாக தோன்றும்.