हृदय से कथन

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.   (௲௨௱௪௰௧ - 1241)
 

रोग-शमन हित रे हृदय, जो यह हुआ असाध्य ।
क्या न कहोगे सोच कर, कोई औषध साध्य ॥ (१२४१)

காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.   (௲௨௱௪௰௨ - 1242)
 

हृदय ! जिओ तुम, नाथ तो, करते हैं नहिं प्यार ।
पर तुम होते हो व्यथित, यह मूढ़ता अपार ॥ (१२४२)

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.   (௲௨௱௪௰௩ - 1243)
 

रे दिल ! बैठे स्मरण कर, क्यों हो दुख में चूर ।
दुःख-रोग के जनक से, स्नेह-स्मरण है दूर ॥ (१२४३)

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.   (௲௨௱௪௰௪ - 1244)
 

नेत्रों को भी ले चलो, अरे हृदय, यह जान ।
उनके दर्शन के लिये, खाते मेरी जान ॥ (१२४४)

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.   (௲௨௱௪௰௫ - 1245)
 

यद्यपि हम अनुरक्त हैं, वे हैं नहिं अनुरक्त ।
रे दिल, यों निर्मम समझ, हो सकते क्या त्यक्त ॥ (१२४५)

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.   (௲௨௱௪௰௬ - 1246)
 

जब प्रिय देते मिलन सुख, गया नहीं तू रूठ ।
दिल, तू जो अब क्रुद्ध है, वह है केवल झूठ ॥ (१२४६)

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.   (௲௨௱௪௰௭ - 1247)
 

अरे सुदिल, तज काम को, या लज्जा को त्याग ।
मैं तो सह सकती नहीं, इन दोनों की आग ॥ (१२४७)

பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.   (௲௨௱௪௰௮ - 1248)
 

रे मेरे दिल, यों समझ, नहीं दयार्द्र सुजान ।
बिछुड़े के पीछे लगा, चिन्ताग्रस्त अजान ॥ (१२४८)

உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.   (௲௨௱௪௰௯ - 1249)
 

तेरे अन्दर जब रहा, प्रियतम का आवास ।
रे दिल, उनका स्मरण कर, जावे किसके पास ॥ (१२४९)

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.   (௲௨௱௫௰ - 1250)
 

फिर न मिले यों तज दिया, उनको दिल में ठौर ।
देने से मैं खो रही, अभ्यन्तर छवि और ॥ (१२५०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: பேகடா  |  Tala: ரூபகம்
பல்லவி:
நினைத் தொன்று சொல்லாயோ - நெஞ்சே
நினைத் தொன்று சொல்லாயோ

அநுபல்லவி:
துணை நினையன்றி யாரை நான் தேடுவேன்
துஞ்சாத நெஞ்சோடு கிளத்தலைப் பாடுவேன்

சரணம்:
ஆதரவில்லாரை ஏனோ நினைக்கின்றாய்
பேதமையால் நெஞ்சே தேடித் திகைக்கின்றாய்
காதலை விடு ஒன்றா நாணத்தை விட்டிடு
கருதும் இவ்விரண்டையும் நான் தாங்க முடியாது

கலந்துணர்த்தும் விதம் காதலர் வரக் கண்டால்
காணாமற் போவாயா வீணாக நிற்பாயா
புலந்துணராய் ஏனோ பொய்க் காய்வு காய்வது
புதுவெள்ளம் போலவர் வந்திட்டால் பாய்வது




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22