राष्ट्र

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.   (௭௱௩௰௧ - 731)
 

अक्षय उपज सुयोग्य जन, ह्रासहीन धनवान ।
मिल कर रहते हैं जहाँ, है वह राष्ट्र महान ॥ (७३१)

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.   (௭௱௩௰௨ - 732)
 

अति धन से कमनीय बन, नाशहीनता युक्त ।
प्रचुर उपज होती जहाँ, राष्ट्र वही है उक्त ॥ (७३२)

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு.   (௭௱௩௰௩ - 733)
 

एक साथ जब आ पड़ें, तब भी सह सब भार ।
देता जो राजस्व सब, है वह राष्ट्र अपार ॥ (७३३)

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.   (௭௱௩௰௪ - 734)
 

भूख अपार न है जहाँ, रोग निरंतर है न ।
और न नाशक शत्रु भी, श्रेष्ठ राष्ट्र की सैन ॥ (७३४)

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு.   (௭௱௩௰௫ - 735)
 

होते नहीं, विभिन्न दल, नाशक अंतर-वैर ।
नृप-कंटक खूनी नहीं, वही राष्ट्र है, ख़ैर ॥ (७३५)

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.   (௭௱௩௰௬ - 736)
 

नाश न होता, यदि हुआ, तो भी उपज यथेष्ट ।
जिसमें कम होती नहीं, वह राष्ट्रों में श्रेष्ठ ॥ (७३६)

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.   (௭௱௩௰௭ - 737)
 

कूप सरोवर नद-नदी, इनके पानी संग ।
सुस्थित पर्वत सुदृढ़ गढ़, बनते राष्ट्र-सुअंग ॥ (७३७)

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.   (௭௱௩௰௮ - 738)
 

प्रचुर उपज, नीरोगता, प्रसन्नता, ऐश्वर्य ।
और सुरक्षा, पाँच हैं, राष्ट्र-अलंकृति वर्य ॥ (७३८)

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.   (௭௱௩௰௯ - 739)
 

राष्ट्र वही जिसकी उपज, होती है बिन यत्न ।
राष्ट्र नहीं वह यदि उपज, होती है कर यत्न ॥ (७३९)

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.   (௭௱௪௰ - 740)
 

उपर्युक्त साधन सभी, होते हुए अपार ।
प्रजा-भूप-सद्‍भाव बिन, राष्ट्र रहा बेकार ॥ (७४०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: தோடி  |  Tala: ஆதி
பல்லவி:
வள்ளுவர் கண்ட திருநாடு - இந்த
வையக மெல்லாம் இதற்கில்லை ஈடு

அநுபல்லவி:
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வமும் சேர்வதுநாடு என்றே திகழும்

சரணம்:
வருக வருக வென்னும் மாமலைத் தோற்றம்
வருபுனல் ஊற்றுடன் மழையும் பாராட்டும்
பெருகிடும் செல்வமுடன் விளைவின்பமும் போற்றும்
பேரன்பு காட்டி மக்கள் பசிப்பிணியை ஆற்றும்

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல் குறும்பும் இல்லாத நாடாகவே நிலைக்கும்
வல்லரண் கொண்டதாக வாழ்வும் வளமும் பொங்கும்
எல்லோரும் வாழும் நல்ல இசைமுரசும் முழங்கும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22