नीचता

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.   (௲௭௰௧ - 1071)
 

हैं मनुष्य के सदृश ही, नीच लोग भी दृश्य ।
हमने तो देखा नहीं, ऐसा जो सादृश्य ॥ (१०७१)

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்.   (௲௭௰௨ - 1072)
 

चिन्ता धर्माधर्म की, नहीं हृदय के बीच ।
सो बढ़ कर धर्मज्ञ से, भाग्यवान हैं नीच ॥ (१०७२)

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.   (௲௭௰௩ - 1073)
 

नीच लोग हैं देव सम, क्योंकि निरंकुश जीव ।
वे भी करते आचरण, मनमानी बिन सींव ॥ (१०७३)

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.   (௲௭௰௪ - 1074)
 

मनमौजी ऐसा मिले, जो अपने से खर्व ।
तो उससे बढ़ खुद समझ, नीच करेगा गर्व ॥ (१०७४)

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.   (௲௭௰௫ - 1075)
 

नीचों के आचार का, भय ही है आधार ।
भय बिन भी कुछ तो रहे, यदि हो लाभ-विचार ॥ (१०७५)

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.   (௲௭௰௬ - 1076)
 

नीच मनुज ऐसा रहा, जैसा पिटता ढोल ।
स्वयं सुने जो भेद हैं, ढो अन्यों को खोल ॥ (१०७६)

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.   (௲௭௰௭ - 1077)
 

गाल-तोड़ घूँसा बिना, जो फैलाये हाथ ।
झाडेंगे नहिं अधम जन, निज झूठा भी हाथ ॥ (१०७७)

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.   (௲௭௰௮ - 1078)
 

सज्जन प्रार्थन मात्र से, देते हैं फल-दान ।
नीच निचोड़ों ईख सम, तो देते रस-पान ॥ (१०७८)

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.   (௲௭௰௯ - 1079)
 

खाते पीते पहनते, देख पराया तोष ।
छिद्रान्वेषण-चतुर जो, नीच निकाले दोष ॥ (१०७९)

எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.   (௲௮௰ - 1080)
 

नीच लोग किस योग्य हों, आयेंगे क्या काम ।
संकट हो तो झट स्वयं, बिक कर बनें गुलाम ॥ (१०८०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: காப்பி  |  Tala: ஆதி
பல்லவி:
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங் கண்டதில்லை இவ்வுலகினில்

அநுபல்லவி:
மிக்கவும் தேவரனையர் கயவர் என்றும்
மேலும் இதற்குப் பொருள்
கூறும் திருக்குறள் சொல்

சரணம்:
என்னதான் பாடினாலும் இரவலர்க் கொன்றீயார்
கன்னத்தில் அறைவோர்க்கே காலில் வீழ்ந்தும் தருவார்
அன்னதன் அச்சமே கீழ்களது ஆசாரம்
அடுத்தவன் வாழ்வு கண்டால் அடுக்கியே குற்றம் கூறும்

எள்ளையும் கரும்பையும் கசக்கினால் அன்றோ பயன்
இளநீரை வெட்டினால் தான் இனிதாக மாந்தும் நயன்
கொல்லப் பயன்படும் கீழ்க் குணமும் இவ்வாறல்லவோ
சொல்லப் பயன்படுவார் சான்றோர் என்றும் சொல்லவோ




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22