सहधर्मिणो

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.   (௫௰௧ - 51)
 

गृहिणी-गुण-गण प्राप्त कर, पुरुष-आय अनुसार ।
जो गृह-व्यय करती वही, सहधर्मिणी सुचार ॥ (५१)

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.   (௫௰௨ - 52)
 

गुण-गण गृहणी में न हो, गृह्य-कर्म के अर्थ ।
सुसंपन्न तो क्यों न हो, गृह-जीवन है व्यर्थ ॥ (५२)

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?.   (௫௰௩ - 53)
 

गृहिणी रही सुधर्मिणी, तो क्या रहा अभाव ।
गृहिणी नहीं सुधर्मिणी, किसका नहीं अभाव ॥ (५३)

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.   (௫௰௪ - 54)
 

स्त्री से बढ़ कर श्रेष्ठ ही, क्या है पाने योग्य ।
यदि हो पातिव्रत्य की, दृढ़ता उसमें योग्य ॥ (५४)

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.   (௫௰௫ - 55)
 

पूजे सती न देव को, पूज जगे निज कंत ।
उसके कहने पर ‘बरस’, बरसे मेघ तुरंत ॥ (५५)

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.   (௫௰௬ - 56)
 

रक्षा करे सतीत्व की, पोषण करती कांत ।
गृह का यश भी जो रखे, स्त्री है वह अश्रांत ॥ (५६)

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.   (௫௰௭ - 57)
 

परकोटा पहरा दिया, इनसे क्या हो रक्ष ।
स्त्री हित पातिव्रत्य ही, होगा उत्तम रक्ष ॥ (५७)

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.   (௫௰௮ - 58)
 

यदि पाती है नारियाँ, पति पूजा कर शान ।
तो उनका सुरधाम में, होता है बहुमान ॥ (५८)

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.   (௫௰௯ - 59)
 

जिसकी पत्नी को नहीं, घर के यश का मान ।
नहिं निन्दक के सामने, गति शार्दूल समान ॥ (५९)

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.   (௬௰ - 60)
 

गृह का जयमंगल कहें, गृहिणी की गुण-खान ।
उनका सद्भूषण कहें, पाना सत्सन्तान ॥ (६०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: காம்போதி  |  Tala: ஆதி
பல்லவி:
பெண்ணின் பெருமையை
எண்ணி நாம் மதித்திடப்
பேசும் திருக்குறள் காண்!
பொய்யா மொழியார்
பேசும் திருக்குறள் காண்!

அநுபல்லவி:
கண்ணின் மணியாய்க் கனியின் சுவையாய்க்
கலந்துயிர் வாழ்க்கையில்
மலர்ந்து நலம் விளைக்கும்

சரணம்:
தன்னையும் காத்துத் தன் கணவனையும் காத்து
தகுதியுடைய புகழ் மிகுதியும் சேர்த்து
பொன்னைப் பொருளைவிட மென்மேலாய்ப்
போற்றும் தன் கற்பினை ஏற்றும் திண்மை மிகுந்த

நினைத்தபடி நடக்கும் ஆடவர் தம்மை
நேர்வழிப் படுத்தியே சீர்செய்யும் பெண்மை
"மனைத்தக்க மாண்புடையளாகித் தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத்துணை" என்றே மணம் கமழும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22