औषध

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.   (௯௱௪௰௧ - 941)
 

वातादिक जिनको गिना, शास्त्रज्ञों ने तीन ।
बढ़ते घटते दुःख दें, करके रोगाधीन ॥ (९४१)

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.   (௯௱௪௰௨ - 942)
 

खादित का पचना समझ, फिर दे भोजन-दान ।
तो तन को नहिं चाहिये, कोई औषध-पान ॥ (९४२)

அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.   (௯௱௪௰௩ - 943)
 

जीर्ण हुआ तो खाइये, जान उचित परिमाण ।
देहवान हित है वही, चिरायु का सामान ॥ (९४३)

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.   (௯௱௪௰௪ - 944)
 

जीर्ण कुआ यह जान फिर, खूब लगे यदि भूख ।
खाओ जो जो पथ्य हैं, रखते ध्यान अचूक ॥ (९४४)

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.   (௯௱௪௰௫ - 945)
 

करता पथ्याहार का, संयम से यदि भोग ।
तो होता नहिं जीव को, कोई दुःखद रोग ॥ (९४५)

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.   (௯௱௪௰௬ - 946)
 

भला समझ मित भोज का, जीमे तो सुख-वास ।
वैसे टिकता रोग है, अति पेटू के पास ॥ (९४६)

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.   (௯௱௪௰௭ - 947)
 

जाठराग्नि की शक्ति का, बिना किये सुविचार ।
यदि खाते हैं अत्याधिक, बढ़ते रोग अपार ॥ (९४७)

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.   (௯௱௪௰௮ - 948)
 

ठीक समझ कर रोग क्या, उसका समझ निदान ।
समझ युक्ति फिर शमन का, करना यथा विधान ॥ (९४८)

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.   (௯௱௪௰௯ - 949)
 

रोगी का वय, रोग का, काल तथा विस्तार ।
सोच समझकर वैद्य को, करना है उपचार ॥ (९४९)

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து.   (௯௱௫௰ - 950)
 

रोगी वैद्य देवा तथा, तीमारदार संग ।
चार तरह के तो रहे, वैद्य शास्त्र के अंग ॥ (९५०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: இந்தோளம்  |  Tala: ரூபகம்
பல்லவி:
மருந்து நல்ல மருந்து - திரு
வள்ளுவனார் தரும் செந்தமிழ் மருந்து

அநுபல்லவி:
இருந்தொரு நூறாண்டும் வாழ்ந்திடச் செய்திடும்
இன்புற மாந்தர்கள் துன்பநோய் தீர்த்திடும்

சரணம்:
"நோய் நாடி நோய்முதல்நாடி யது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்பதுவும் பணிக்கும்
தாய்போலும் அன்பு கொண்டு தாங்கிடவும் முன்னிற்கும்
தன்னளவைத் தானறிந்தே உண்ணும்விதம் கற்பிக்கும்

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கென்னும் விதம் நண்ணின்
கூறும் வேறு மருந்ததும் வேண்டுமோ யாக்கைக்குக்
குன்றாத செல்வமதாய் அமைந்திடும் வாழ்க்கைக்கு




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22