संतान- लाभ

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.   (௬௰௧ - 61)
 

बुद्धिमान सन्तान से, बढ़ कर विभव सुयोग्य ।
हम तो मानेंगे नहीं, हैं पाने के योग्य ॥ (६१)

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.   (௬௰௨ - 62)
 

सात जन्म तक भी उसे, छू नहिं सकता ताप ।
यदि पावे संतान जो, शीलवान निष्पाप ॥ (६२)

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.   (௬௰௩ - 63)
 

निज संतान-सुकर्म से, स्वयं धन्य हों जान ।
अपना अर्थ सुधी कहें, है अपनी संतान ॥ (६३)

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.   (௬௰௪ - 64)
 

नन्हे निज संतान के, हाथ विलोड़ा भात ।
देवों के भी अमृत का, स्वाद करेगा मात ॥ (६४)

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.   (௬௰௫ - 65)
 

निज शिशु अंग-स्पर्श से, तन को है सुख-लाभ ।
टूटी- फूटी बात से, श्रुति को है सुख-लाभ ॥ (६५)

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.   (௬௰௬ - 66)
 

मुरली-नाद मधुर कहें, सुमधुर वीणा-गान ।
तुतलाना संतान का, जो न सुना निज कान ॥ (६६)

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.   (௬௰௭ - 67)
 

पिता करे उपकार यह, जिससे निज संतान ।
पंडित-सभा-समाज में, पावे अग्रस्थान ॥ (६७)

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.   (௬௰௮ - 68)
 

विद्यार्जन संतान का, अपने को दे तोष ।
उससे बढ़ सब जगत को, देगा वह संतोष ॥ (६८)

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.   (௬௰௯ - 69)
 

पुत्र जनन पर जो हुआ, उससे बढ़ आनन्द ।
माँ को हो जब वह सुने, महापुरुष निज नन्द ॥ (६९)

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்   (௭௰ - 70)
 

पुत्र पिता का यह करे, बदले में उपकार ।
`धन्य धन्य इसके पिता’, यही कहे संसार ॥ (७०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சாமா  |  Tala: ரூபகம்
பல்லவி:
மதலையின் மொழிக்கிணையாமோ
மங்கல மாட்சியிலே
நன் கலமாகப் பெறும்

அநுபல்லவி:
குதலை மொழியது குழலினும் இனியது
கொண்டிடும் மேன்மையைத்
தண்டமிழ்க் குறள் சொல்லும்

சரணம்:
இல்லற வாழ்க்கையின் இன்பக் கனியமுதம்
எவரும் மதிக்கவரும் ஈடில்லா மக்கட் செல்வம்
நல்லறம் கூறவும் நடைமுறை தேறவும்
நாட்டின் நலம் கருதி வீட்டினிலே தவழும்

ஈன்ற பொழுதைவிட இனிது மகிழ அன்னை
இவன் தந்தை என்னோற்றானோ என்று புகழத்தன்னை
ஆன்றோரை அணுகி அறிவதெல்லாம் அறிந்து
சான்றோன் இவன் எனத் தகுதிபெற வளரும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22