लज्जा- त्याग- कथन

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.   (௲௱௩௰௧ - 1131)
 

जो चखने पर प्रेम रस, सहें वेदना हाय ।
‘मडल’-सुरक्षा के बिना, उन्हें न सबल सहाय ॥ (११३१)

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.   (௲௱௩௰௨ - 1132)
 

आत्मा और शरीर भी, सह न सके जो आग ।
चढ़े ‘मडल’ पर धैर्य से, करके लज्जा त्याग ॥ (११३२)

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.   (௲௱௩௰௩ - 1133)
 

पहले मेरे पास थीं, सुधीरता और लाज ।
कामी जन जिसपर चढ़ें, वही ‘मडल’ है आज ॥ (११३३)

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.   (௲௱௩௰௪ - 1134)
 

मेरी थी लज्जा तथा, सुधीरता की नाव ।
उसे बहा कर ले गया, भीषण काम-बहाव ॥ (११३४)

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.   (௲௱௩௰௫ - 1135)
 

माला सम चूड़ी सजे, जिस बाला के हाथ ।
उसने संध्या-विरह-दुख, दिया ‘मडल’ के साथ ॥ (११३५)

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.   (௲௱௩௰௬ - 1136)
 

कटती मुग्धा की वजह, आँखों में ही रात ।
अर्द्ध-रात्रि में भी ‘मडल’, आता ही है याद ॥ (११३६)

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.   (௲௱௩௰௭ - 1137)
 

काम-वेदना जलधि में, रहती मग्न यथेष्ट ।
फिर भी ‘मडल’ न जो चढे, उस स्त्री से नहिं श्रेष्ठ ॥ (११३७)

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.   (௲௱௩௰௮ - 1138)
 

संयम से रहती तथा, दया-पात्र अति वाम ।
यह न सोच कर छिप न रह, प्रकट हुआ है काम ॥ (११३८)

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.   (௲௱௩௰௯ - 1139)
 

मेरा काम यही समझ, सबको वह नहिं ज्ञात ।
नगर-वीथि में घूमता, है मस्ती के साथ ॥ (११३९)

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.   (௲௱௪௰ - 1140)
 

रहे भुक्त-भोगी नहीं, यथा चुकी हूँ भोग ।
हँसते मेरे देखते, बुद्धि हीन जो लोग ॥ (११४०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: பைரவி  |  Tala: ரூபகம்
பல்லவி:
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல் அல்லது இல்லை வலி என்று கூறும்

அநுபல்லவி:
காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணையதும் தன்னோடு

சரணம்:
பூம்பட்டு மேனி தொடலைக் குறுந் தொடியிவளே
புணர்ந்தும் பிரிந்தும் மாலை வருத்தும் துயரைச் செய்தாளே
யாம்பட்டது தாம்படாத வாறதனாலே
யாங்கண்ணின் காண நகுப அறிவிலார்களே

மடலூர் தலையாமத்திலும் உள்ளுகின்றேனே
படல் ஒல்லா பேதைக் கென்றன் கண்ணும் உறங்கேனே
கடலன்ன காம நோயால் தான் உழன்றாலும்
மடல் ஏறாப் பெண்ணின் பெருந்தக்கதும் உண்டோ




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22