वित्त- साधन- विधि

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.   (௭௱௫௰௧ - 751)
 

धन जो देता है बना, नगण्य को भी गण्य ।
उसे छोड़ कर मनुज को, गण्य वस्तु नहिं अन्य ॥ (७५१)

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.   (௭௱௫௰௨ - 752)
 

निर्धन लोगो का सभी, करते हैं अपमान ।
धनवनों का तो सभी, करते हैं सम्मन ॥ (७५२)

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.   (௭௱௫௰௩ - 753)
 

धनरूपी दीपक अमर, देता हुआ प्रकाश ।
मनचाहा सब देश चल, करता है नम-नाश ॥ (७५३)

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.   (௭௱௫௰௪ - 754)
 

पाप-मार्ग को छोड़कर, न्याय रीति को जान ।
अर्जित धन है सुखद औ’, करता धर्म प्रदान ॥ (७५४)

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.   (௭௱௫௰௫ - 755)
 

दया और प्रिय भाव से, प्राप्त नहीं जो वित्त ।
जाने दो उस लाभ को, जमे न उसपर चित्त ॥ (७५५)

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.   (௭௱௫௰௬ - 756)
 

धन जिसका वारिस नहीं, धन चूँगी से प्राप्त ।
विजित शत्रु का भेंट-धन, धन हैं नृप हित आप्त ॥ (७५६)

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.   (௭௱௫௰௭ - 757)
 

जन्माता है प्रेम जो, दयारूप शिशु सुष्ट ।
पालित हो धन-धाय से, होता है बह पुष्ट ॥ (७५७)

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.   (௭௱௫௰௮ - 758)
 

निज धन रखते हाथ में, करना कोई कार्य ।
गिरि पर चढ़ गज-समर का, ईक्षण सदृश विचार्य ॥ (७५८)

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.   (௭௱௫௰௯ - 759)
 

शत्रु-गर्व को चिरने, तेज शास्त्र जो सिद्ध ।
धन से बढ़ कर है नहीं, सो संग्रह कर वित्त ॥ (७५९)

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.   (௭௱௬௰ - 760)
 

धर्म, काम दोनों सुलभ, मिलते हैं इक साथ ।
न्यायार्जित धन प्रचुर हो, लगता जिसके हाथ ॥ (७६०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: கௌரிமனோகரி  |  Tala: ஆதி
பல்லவி:
பொருள் செயல் வகை யறிவோமே - அது
பொருந்தும் நல்ல வழியில்
போற்றிச் செய்வோமே

அநுபல்லவி:
"அருளொடும் அன்பொடும் வாராத பொருளாக்கம்
புல்லார் புரளவிடல்" எனும் குறள் மணி வாக்கும்

சரணம்:
குன்றேறி யானைப் போரைக் காண்பது போல
கொண்டதன் கைப்பொருளால் செயும் தொழிலாலே
என்றுமே உயர்வாகி இருட்பகையை அறுக்கும்
எண்ணிய தேய மெல்லாம் ஏற்றும் பொய்யா விளக்கும்

அன்பு பெற்ற குழந்தையாகும் நல்லருளே
அதை வளர்க்கும் செவிலித்தாயாகும் பொருளே
இன்பமும் நல்லறமும் தனக்கிரு பாலும்
எற்றிடவே உலகில் இருந்தர சாளும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22