सैन्य- साहस

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.   (௭௱௭௰௧ - 771)
 

डटे रहो मत शत्रुओ, मेरे अधिप समक्ष ।
डट कर कई शिला हुए, मेरे अधिप समक्ष ॥ (७७१)

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.   (௭௱௭௰௨ - 772)
 

वन में शश पर जो लगा, धरने से वह बाण ।
गज पर चूके भाल को, धरने में है मान ॥ (७७२)

பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.   (௭௱௭௰௩ - 773)
 

निर्दय साहस को कहें, महा धीरता सार ।
संकट में उपकार है, उसकी तीक्षण धार ॥ (७७३)

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.   (௭௱௭௰௪ - 774)
 

कर-भाला गज पर चला, फिरा खोजते अन्य ।
खींच भाल छाती लगा, हर्षित हुआ सुधन्य ॥ (७७४)

விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.   (௭௱௭௰௫ - 775)
 

क्रुद्ध नेत्र यदि देख कर, रिपु का भाल-प्रहार ।
झपकेंगे तो क्या नहीं, वह वीरों को हार ॥ (७७५)

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.   (௭௱௭௰௬ - 776)
 

‘गहरा घाव लगा नहीं’, ऐसे दिन सब व्यर्थ ।
बीते निज दिन गणन कर, यों मानता समर्थ ॥ (७७६)

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.   (௭௱௭௰௭ - 777)
 

जग व्यापी यश चाहते, प्राणों की नहिं चाह ।
ऐसों का धरना कड़ा, शोभाकर है, वाह ॥ (७७७)

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்.   (௭௱௭௰௮ - 778)
 

प्राण-भय-रहित वीर जो, जब छिड़ता है युद्ध ।
साहस खो कर ना रुकें, नृप भी रोकें क्रुद्ध ॥ (७७८)

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.   (௭௱௭௰௯ - 779)
 

प्रण रखने हित प्राण भी, छोड़ेंगे जो चण्ड ।
कौन उन्हें प्रण-भंग का, दे सकता है दण्ड़ ॥ (७७९)

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.   (௭௱௮௰ - 780)
 

दृग भर आये भूप के, सुन जिसका देहांत ।
ग्रहण योग्य है माँग कर, उसका जैसा अंत ॥ (७८०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: இந்துஸ்தான்பியாக்  |  Tala: ரூபகம்
பல்லவி:
படையின் செருக்குப் பார்க்கத் தகுந்த தமிழ்ப்
பண் பாட்டில் முளைத்த திது

அநுபல்லவி:
படையின் மாட்சி பயின்று தேர்ந்து
படுகளத்தில் வந்து நின்று
இடையூற்றிற்கும் அஞ்சிடாமல்
எதிர்ப் படையைச் சிதற அடிக்கும்

சரணம்:
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும் - தன்
மெய்வேல் பறியா நகும் - வீரன்
மெய்யில் விழுப்புண் படாத வாழ்நாளெல்லாம்
வீணாளாய் எண்ணுவன் எடுத்து - புகழ்
வெண்டுவன் போர்முனை அடுத்து

கான முயல் எய்த அம்பினில் யானையை
எய்து பிழைத்த வேல் ஏந்தும் - யானை
எய்து பிழைத்த வேல் ஏந்தும்
ஆனதன் பேராண்மை காட்டவும் பகைக்கும்
அன்பு பேராண்மை காட்டவும் பகைக்கும்
அன்பு கொண்டுதவும் பாரீர் - உண்மை
அன்பு கொண்டுதவும் பாரீர்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22