मिलन- उत्कंठा

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.   (௲௨௱௮௰௧ - 1281)
 

मुद होना स्मृति मात्र से, दर्शन से उल्लास ।
ये गुण नहीं शराब में, रहे काम के पास ॥ (१२८१)

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.   (௲௨௱௮௰௨ - 1282)
 

यदि आवेगा काम तो, बढ़ कर ताड़ समान ।
तिल भर भी नहिं चाहिये, करना प्रिय से मान ॥ (१२८२)

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.   (௲௨௱௮௰௩ - 1283)
 

यद्यपि मनमानी करें, बिन आदर की सैन ।
प्रियतम को देखे बिना, नयनों को नहिं चैन ॥ (१२८३)

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.   (௲௨௱௮௰௪ - 1284)
 

गयी रूठने री सखी, करके मान-विचार ।
मेरा दिल वह भूल कर, मिलने को तैयार ॥ (१२८४)

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.   (௲௨௱௮௰௫ - 1285)
 

कूँची को नहिं देखते, यथा आंजते अक्ष ।
उनकी भूल न देखती, जब हैं नाथ समक्ष ॥ (१२८५)

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.   (௲௨௱௮௰௬ - 1286)
 

जब प्रिय को मैं देखती, नहीं देखती दोष ।
ना देखूँ तो देखती, कुछ न छोड़ कर दोष ॥ (१२८६)

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.   (௲௨௱௮௰௭ - 1287)
 

कूदे यथा प्रवाह में, बाढ़ बहाती जान ।
निष्फलता को जान कर, क्या हो करते मान ॥ (१२८७)

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.   (௲௨௱௮௰௮ - 1288)
 

निन्दाप्रद दुख क्यों न दे, मद्यप को ज्यों पान ।
त्यों है, वंचक रे, हमें, तेरी छाती जान ॥ (१२८८)

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.   (௲௨௱௮௰௯ - 1289)
 

मृदुतर हो कर सुमन से, जो रहता है काम ।
बिरले जन को प्राप्त है, उसका शुभ परिणाम ॥ (१२८९)

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.   (௲௨௱௯௰ - 1290)
 

उत्कंठित मुझसे अधिक, रही मिलन हित बाल ।
मान दिखा कर नयन से, गले लगी तत्काल ॥ (१२९०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: தேசு  |  Tala: ஆதி
பல்லவி:
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு - தோழி
கள்ளுக்கில் காமத்திற் குண்டு

அநுபல்லவி:
வெள்ளம் போல் புணர்ச்சி விதும்பலே நாடும்
வீணையும் நாதமுமாய் இழைந் தொன்று கூடும்

சரணம்:
பழுது பலவும் எண்ணி ஊடலாம் என்று சென்றேன்
பாங்கியே அதுமறந்து கூடலைத்தான் கண்டேன்
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து நான் என்ன சொல்வேன்

போதுவாய் திறந்திடும் போதே பறந்து வரும்
பூம்பொறி வண்டினமும் அமர்ந்து தண்டேன் நுகரும்
ஈதுரை மலரினும் மெல்லிது காமம்
எனவே சிலர்தான் அதன் செல்வி தலைப்படுவார்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22