अतिथि- सत्कार

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.   (௮௰௧ - 81)
 

योग-क्षेम निबाह कर, चला रहा घर-बार ।
आदर करके अतिथि का, करने को उपकार ॥ (८१)

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.   (௮௰௨ - 82)
 

बाहर ठहरा अतिथि को, अन्दर बैठे आप ।
देवामृत का क्यों न हो, भोजन करना पाप ॥ (८२)

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.   (௮௰௩ - 83)
 

दिन दिन आये अतिथि का, करता जो सत्कार ।
वह जीवन दारिद्रय का, बनता नहीं शिकार ॥ (८३)

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.   (௮௰௪ - 84)
 

मुख प्रसन्न हो जो करे, योग्य अतिथि-सत्कार ।
उसके घर में इन्दिरा, करती सदा बहार ॥ (८४)

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.   (௮௰௫ - 85)
 

खिला पिला कर अतिथि को, अन्नशेष जो खाय ।
ऐसों के भी खेत को, काहे बोया जाया ॥ (८५)

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.   (௮௰௬ - 86)
 

प्राप्त अतिथि को पूज कर, और अतिथि को देख ।
जो रहता, वह स्वर्ग का, अतिथि बनेगा नेक ॥ (८६)

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.   (௮௰௭ - 87)
 

अतिथि-यज्ञ के सुफल की, महिमा का नहिं मान ।
जितना अतिथि महान है, उतना ही वह मान ॥ (८७)

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.   (௮௰௮ - 88)
 

'कठिन यत्न से जो जुड़ा, सब धन हुआ समाप्त' ।
यों रोवें, जिनको नहीं, अतिथि-यज्ञ-फल प्राप्त ॥ (८८)

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.   (௮௰௯ - 89)
 

निर्धनता संपत्ति में, अतिथि-उपेक्षा जान ।
मूर्ख जनों में मूर्ख यह, पायी जाती बान ॥ (८९)

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து.   (௯௰ - 90)
 

सूंघा ‘अनिच्च’ पुष्प को, तो वह मुरझा जाय ।
मुँह फुला कर ताकते, सूख अतिथि-मुख जाय ॥ (९०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: வசந்தா  |  Tala: ஆதி
பல்லவி:
அன்புடன் தேடிவந்த அரிய விருந்தோம்பும்
பண்பிதே தமிழ்ப் பண்பாம்
பாங்கியே நீ உணர்வாய்

அநுபல்லவி:
வன்புகொள்ளாவிதமே வாழ்க்கைத் துணைநலம்சேர்
மக்களன்புடைமையில்
மருவி வரும் செல்வமாய்

சரணம்:
இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
இனிதுற வேளாண்மை செய்தற் பொருட்டே; என்னும்
விருந்து புறத்திருக்கத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் உண்ணாத பெருந்தன்மையே பெறுவோம்

வந்த விருந்தினர்கள் சிந்தை மகிழும் வண்ணம்
மலர்ந்த முகம் இன்சொல்லால் வருகை மிகவும் ஏற்று
சொந்தம் மிகப் பாராட்டி சூழவிருந்தே உண்ணைத்
தோன்றும் குறள் இன்பத்தைத் தோகை நீ காண்பாயடி




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22