कुलोनता

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.   (௯௱௫௰௧ - 951)
 

लज्जा, त्रिकरण-एकता, इन दोनों का जोड़ ।
सहज मिले नहिं और में, बस कुलीन को छोड़ ॥ (९५१)

ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.   (௯௱௫௰௨ - 952)
 

सदाचार लज्जा तथा, सच्चाई ये तीन ।
इन सब से विचलित कभी, होते नहीं कुलीन ॥ (९५२)

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.   (௯௱௫௰௩ - 953)
 

सुप्रसन्न मुख प्रिय वचन, निंदा-वर्जन दान ।
सच्चे श्रेष्ठ कुलीन हैं, चारों का संस्थान ॥ (९५३)

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.   (௯௱௫௰௪ - 954)
 

कोटि कोटि धन ही सही, पायें पुरुष कुलीन ।
तो भी वे करते नहीं, रहे कर्म जो हीन ॥ (९५४)

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று.   (௯௱௫௰௫ - 955)
 

हाथ खींचना ही पड़े, यद्यपि हो कर दीन ।
छोडें वे न उदारता, जिनका कुल प्राचीन ॥ (९५५)

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.   (௯௱௫௰௬ - 956)
 

पालन करते जी रहें, जो निर्मल कुल धर्म ।
यों जो हैं वे ना करें, छल से अनुचित कर्म ॥ (९५६)

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.   (௯௱௫௰௭ - 957)
 

जो जन बडे कुलीन हैं, उन पर लगा कलंक ।
नभ में चन्द्र-कलंक सम, प्रकटित हो अत्तंग ॥ (९५७)

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.   (௯௱௫௰௮ - 958)
 

रखते सुगुण कुलीन के, जो निकले निःस्नेह ।
उसके कुल के विषय में, होगा ही संदेह ॥ (९५८)

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.   (௯௱௫௰௯ - 959)
 

अंकुर करता है प्रकट, भू के गुण की बात ।
कुल का गुण, कुल-जात की, वाणी करती ज्ञात ॥ (९५९)

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.   (௯௱௬௰ - 960)
 

जो चाहे अपना भला, पकडे लज्जा-रीत ।
जो चाहे कुल-कानि को, सब से रहे विनीत ॥ (९६०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சக்கரவாகம்  |  Tala: ஆதி
பல்லவி:
ஒழுக்கத்திலே உயர்ந்த குடிமை - இது
ஒழுக்கத்திலே உயர்ந்த குடிமை
ஒப்புரவாண்மையுடன் செப்பமும் நாணும் கொண்ட

அநுபல்லவி:
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந்தார் என்று செல்லும் பொருள் நன்று காணும் குறள்

சரணம்:
மேலும் மேலும் துன்பம் வந்தாலும் வீழ்ச்சில்லார்
விண்ணில் உலாவும் மதி தன்னிலும் மேன்மையுள்ளார்
பாலும் கரும்பும் பொன்னும் சந்தனமும் போல்வார்
பண்பினோடு பழம் பெருமை வாய்ந்த குடி
வண்மை ஏழ்மையிலும் நீங்கிடாத படி

தொகையாகவே அடுக்கி ஒரு கோடி தந்தாலும்
தோன்றும் தன் குடிக்கென்றும் குன்றுவ செய்தல்இலர்
நகை ஈகை இன்சொல் இகழாமையே போற்றுவார்
நலம் விளங்கிடவும் குலம் விளங்கிடவும்
நாணயத்தினுடன் நல்லடக்கம் மிகும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22