शत्रु- शक्ति का ज्ञान

பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.   (௮௱௭௰௧ - 871)
 

रिपुता नामक है वही, असभ्यता-अवगाह ।
हँसी-मज़े में भी मनुज, उसकी करे न चाह ॥ (८७१)

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.   (௮௱௭௰௨ - 872)
 

धनु-हल-धारी कृषक से, करो भले ही वैर ।
वाणी-हल-धर कृषक से, करना छोड़ो वैर ॥ (८७२)

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.   (௮௱௭௰௩ - 873)
 

एकाकी रह जो करे, बहुत जनों से वैर ।
पागल से बढ़ कर रहा, बुद्धिहीन वह, खैर ॥ (८७३)

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.   (௮௱௭௰௪ - 874)
 

मित्र बना कर शत्रु को, जो करता व्यवहार ।
महिमा पर उस सभ्य की, टिकता है संसार ॥ (८७४)

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.   (௮௱௭௰௫ - 875)
 

अपना तो साथी नहीं, रिपु हैं दो, खुद एक ।
तो उनमें से ले बना, उचित सहायक एक ॥ (८७५)

தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.   (௮௱௭௰௬ - 876)
 

पूर्व-ज्ञात हो परख कर, अथवा हा अज्ञात् ।
नाश-काल में छोड़ दो, शत्रु-मित्रता बात ॥ (८७६)

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.   (௮௱௭௰௭ - 877)
 

दुःख न कह उस मित्र से, यदि खुद उसे न ज्ञात ।
प्रकट न करना शत्रु से, कमज़ोरी की बात ॥ (८७७)

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.   (௮௱௭௰௮ - 878)
 

ढ़ंग समझ कर कर्म का, निज बल को कर चंड ।
अपनी रक्षा यदि करे, रिपु का मिटे घमंड ॥ (८७८)

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.   (௮௱௭௰௯ - 879)
 

जब पौधा है काटना, जो तरु कांटेदार ।
बढ़ने पर घायल करे, छेदक का कर दार ॥ (८७९)

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.   (௮௱௮௰ - 880)
 

जो रिपुओं के दर्प का, कर सकते नहिं नाश ।
निश्चय रिपु के फूँकते, होता उनका नाश ॥ (८८०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)


கிளிக்கண்ணி:
பண்பின் வழி நடக்கப் பகைவரின் செருக்கடக்க
நண்பர்கள் சூழ்ந்து நிற்க - கிளியே
நாடும் நம் குறளாட்சியே

வில்லே ருழவர் பகை கொள்ளினும் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை - என்றே
சொல்லும் நல் லறிவுரையே

இளைதாகவே முள்மரம் இருந்தாலும் கொல்லவேண்டும்
விளையாட்டுக்கும் பகையை - கிளியே
விரும்புதல் கூடாதடி

இணையும் துணையோ இல்லை என்றாலும் பகை இரண்டால்
துணையதில் ஒன்றைக் கொண்டால் - கிளியே
தோல்வியே இல்லை கண்டாய்

பகை நட்பாக் கொண்டொழுகும் பண்புடையாளன் பெரும்
தகைமைக் கண் தங்கிற்றுலகு - கிளியே
தழைக்கவே பணி புரிவோம்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22