Raga: கமாஸ் | Tala: ஆதி பல்லவி:அருளாளர் இவர்தானம்மா - தூய
அன்பென்னும் அன்னை தந்த
அறத்துப்பாலில் வளர்ந்த
அநுபல்லவி:குறளார்வம் நம் நெஞ்சில்
குடிகொள்ளவே செய்யும்
கொண்டல் செந்தமிழ் தந்த
தென்றல் எனப் புகழ்நல்
சரணம்:இருள்சேர்ந்த இன்னாத உலகில் புகாதவிதம்
என்னாளும் எவ்வுயிர்க்கும் இதம்பலவே புரியும்
அருள்சேர்ந்த நெஞ்சினர் ஆக நமக்குதவும்
அண்ணல் அவர் மொழி கன்னல்
அகம் ஒளிரும்