स्थान का बोध

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.   (௪௱௯௰௧ - 491)
 

कोई काम न कर शुरू, तथा न कर उपहास ।
जब तक रिपु को घेरने, स्थल की है नहिं आस ॥ (४९१)

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.   (௪௱௯௰௨ - 492)
 

शत्रु-भाव से पुष्ट औ’, जो हों अति बलवान ।
उनको भी गढ़-रक्ष तो, बहु फल करे प्रदान ॥ (४९२)

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.   (௪௱௯௰௩ - 493)
 

निर्बल भी बन कर सबल, पावें जय-सम्मान ।
यदि रिपु पर धावा करें, ख़ोज सुरक्षित स्थान ॥ (४९३)

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.   (௪௱௯௰௪ - 494)
 

रिपु निज विजय विचार से, धो बैठेंगे हाथ ।
स्थान समझ यदि कार्य में, जुड़ते दृढ नरनाथ ॥ (४९४)

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.   (௪௱௯௰௫ - 495)
 

गहरे जल में मगर की, अन्यों पर हो जीत ।
जल से बाहर अन्य सब, पावें जय विपरीत ॥ (४९५)

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.   (௪௱௯௰௬ - 496)
 

भारी रथ दृढ चक्रयुत, चले न सागर पार ।
सागरगामी नाव भी, चले न भू पर तार ॥ (४९६)

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்   (௪௱௯௰௭ - 497)
 

निर्भय के अतिरिक्त तो, चाहिये न सहकार ।
उचित जगह पर यदि करें, खूब सोच कर कार ॥ (४९७)

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.   (௪௱௯௰௮ - 498)
 

यदि पाता लघु-सैन्य-युत, आश्रय स्थल अनुकूल ।
उसपर चढ़ बहु-सैन्य युत, होगा नष्ट समूल ॥ (४९८)

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.   (௪௱௯௰௯ - 499)
 

सदृढ़ दुर्ग साधन बड़ा, है नहिं रिपु के पास ।
फिर भी उसके क्षेत्र में, भिड़ना व्यर्थ प्रयास ॥ (४९९)

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.   (௫௱ - 500)
 

जिस निर्भय गजराज के, दन्तलग्न बरछैत ।
गीदड़ भी मारे उसे, जब दलदल में कैंद ॥ (५००)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: இந்தோளம்  |  Tala: கண்ட ஆதி
பல்லவி:
நிலையான இடம் கண்டோம் நெஞ்சே - இனி
நேர்வரும் பகை யெல்லாம்
நெருப்பின் முன் பஞ்சே

அநுபல்லவி:
குலையாத வலிவோடு காலமும் கண்டு
கூடித் தொழில் செய்யவே
குடியாட்சி இடம் கொண்டு

சரணம்:
நீரினில் வலிவுள்ள முதலைபோல் படகு போல்
நிலத்தினில் வலிவுள்ள யானைபோல் தேர் போல்
சீரிடம் மாறாத செயல்திறமே பெருக
செல்லு மிடத்தில் மக்கள் சிறப்புறவே வருக

"எண்ணியார் எண்ணமிழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்" என்னும் குறள் புரிந்து
திண்ணியராக நாட்டின் தேவைக்கே உழைப்போம்
தீமையெல்லாம் ஒழித்தே நன்மையில் தழைப்போம்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22