कर्म- शुद्धि

துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.   (௬௱௫௰௧ - 651)
 

साथी की परिशुद्धता, दे देती है प्रेय ।
कर्मों की परिशुद्धता, देती है सब श्रेय ॥ (६५१)

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.   (௬௱௫௰௨ - 652)
 

सदा त्यागना चाहिये, जो हैं ऐसे कर्म ।
कीर्ति-लाभ के साथ जो, देते हैं नहिं धर्म ॥ (६५२)

ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.   (௬௱௫௰௩ - 653)
 

‘उन्नति करनी चाहिये’, यों जिनको हो राग ।
निज गौरव को हानिकर, करें कर्म वे त्याग ॥ (६५३)

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.   (௬௱௫௰௪ - 654)
 

यद्यपि संकट-ग्रस्त हों, जिनका निश्चल ज्ञान ।
निंद्य कर्म फिर भी सुधी, नहीं करेंगे जान ॥ (६५४)

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.   (௬௱௫௰௫ - 655)
 

जिससे पश्चात्ताप हो, करो न ऐसा कार्य ।
अगर किया तो फिर भला, ना कर ऐसा कार्य ॥ (६५५)

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.   (௬௱௫௰௬ - 656)
 

जननी को भूखी सही, यद्यपि देखा जाय ।
सज्जन-निन्दित कार्य को, तो भी किया न जाय ॥ (६५६)

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.   (௬௱௫௰௭ - 657)
 

दोष वहन कर प्राप्त जो, सज्जन को ऐश्वर्य ।
उससे अति दारिद्रय ही, सहना उसको वर्य ॥ (६५७)

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.   (௬௱௫௰௮ - 658)
 

वर्ज किये बिन वर्ज्य सब, जो करता दुष्कर्म ।
कार्य-पूर्ति ही क्यों न हो, पीड़ा दें वे कर्म ॥ (६५८)

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.   (௬௱௫௰௯ - 659)
 

रुला अन्य को प्राप्त सब, रुला उसे वह जाय ।
खो कर भी सत्संपदा, पीछे फल दे जाय ॥ (६५९)

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.   (௬௱௬௰ - 660)
 

छल से धन को जोड़ कर, रखने की तदबीर ।
कच्चे मिट्टी कलश में, भर रखना ज्यों नीर ॥ (६६०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: பைரவி  |  Tala: ஆதி
பல்லவி:
பழிவரும் வழியினில் பொருளைச் செய்யாதீர்
பச்சை மண் கலத்தில் தண்ணீரைப் பெய்யாதீர்

அநுபல்லவி:
அழிவு வராத நல்ல வழியினில் பொருள் தேடி
ஆட்சி நடத்த வேண்டும் வினைத்தூய்மையை நாடி

சரணம்:
புலி பசித்தாலும் என்ன? புல்லைத் தின்ன ஓடாது
புகழும் சான்றோர் உள்ளமும் வறுமையால் வாடாது
எலிபோன்ற கீழோர் செல்வம் என்றுமே பழிப்பாம்
இழப்பினும் பிற்பயக்கும் நல்லவையே சிறப்பாம்

தனை "ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை எனும்" குறள் வழிநிற்க
வினைநலம் வேண்டியவை எல்லாமே தந்திடும்
அனைவருமே போற்றிப் புகழ முன் வந்திடும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22