परदारविरति

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.   (௱௪௰௧ - 141)
 

परपत्नी-रति-मूढ़ता, है नहिं उनमें जान ।
धर्म-अर्थ के शास्त्र का, जिनको तत्वज्ञान ॥ (१४१)

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.   (௱௪௰௨ - 142)
 

धर्म-भ्रष्टों में नही, ऐसा कोई मूढ़ ।
जैसा अन्यद्वार पर, खड़ा रहा जो मूढ़ ॥ (१४२)

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துதொழுகு வார்.   (௱௪௰௩ - 143)
 

दृढ़ विश्वासी मित्र की, स्त्री से पापाचार ।
जो करता वो मृतक से, भिन्न नहीं है, यार ॥ (१४३)

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.   (௱௪௰௪ - 144)
 

क्या होगा उसको अहो, रखते विभव अनेक ।
यदि रति हो पर-दार में, तनिक न बुद्धि विवेक ॥ (१४४)

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.   (௱௪௰௫ - 145)
 

पर-पत्नी-रत जो हुआ, सुलभ समझ निश्शंक ।
लगे रहे चिर काल तक, उसपर अमिट कलंक ॥ (१४५)

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.   (௱௪௰௬ - 146)
 

पाप, शत्रुता, और भय, निन्दा मिल कर चार ।
ये उसको छोड़ें नहीं, जो करता व्यभिचार ॥ (१४६)

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.   (௱௪௰௭ - 147)
 

जो गृहस्थ पर-दार पर, होवे नहिं आसक्त ।
माना जाता है वही, धर्म-कर्म अनुरक्त ॥ (१४७)

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.   (௱௪௰௮ - 148)
 

पर-नारी नहिं ताकना, है धीरता महान ।
धर्म मात्र नहिं संत का, सदाचरण भी जान ॥ (१४८)

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.   (௱௪௰௯ - 149)
 

सागर-बलयित भूमि पर, कौन भोग्य के योग्य ।
आलिंगन पर- नारि को, जो न करे वह योग्य ॥ (१४९)

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.   (௱௫௰ - 150)
 

पाप- कर्म चाहे करें, धर्म मार्ग को छोड़ ।
पर-गृहिणी की विरति हो, तो वह गुण बेजोड़ ॥ (१५०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சுத்த தந்யாசி  |  Tala: ஆதி
பல்லவி:
பிறனில் விழையாதே - என்றும்
பெருமையை இழக்காதே - நண்பா

அநுபல்லவி:
அறனில்லை இதில் ஆண்மைக்கழகே இல்லை
அன்போ சிறிதும் இல்லை துன்பங்களே தொடரும்

சரணம்:
எத்தனை செல்வம் சீர் சிறப்பிருந்தாலும்
இவர் கனவான் என எவர் புகழ்ந்தாலும்
அத்தனையும் கெடுக்கும் அயல்மனை ஆசை
அகற்றிடு அகற்றிடு உன் மனமாசை

பகை பழிபாவம் அச்சத்தைக் கூட்டும்
பண்புள்ள நண்பரும் பதைத்திட வாட்டும்
தகைமை இல்லாதது தாழ்வு நிலையிது
தன்னுயிர்த் துணைவியைத் தவித்திடச் செய்வது

பிறன்மனை நோக்காப் பெயர் பெறும் ஆண்மை
பெற்றவனாவதில் உனக்குள்ள மேன்மை
திறன்மிக அறமும் நல்லொழுக்கமும் கூடும்
தீவினை உனை விட்டே தூரத்தில் ஓடும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22