संयोग का आनन्द

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.   (௲௱௧ - 1101)
 

पंचेन्द्रिय सुख, रूप औ’, स्पर्श गंध रस शब्द ।
उज्ज्वल चूड़ी से सजी, इसमें सब उपलब्ध ॥ (११०१)

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.   (௲௱௨ - 1102)
 

रोगों की तो है दवा, उनसे अलग पदार्थ ।
जो सुतनू का रोग है, दवा वही रोगार्थ ॥ (११०२)

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.   (௲௱௩ - 1103)
 

निज दयिता मृदु स्कंध पर, सोते जो आराम ।
उससे क्या रमणीय है, कमल-नयन का धाम ॥ (११०३)

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.   (௲௱௪ - 1104)
 

हटने पर देती जला, निकट गया तो शीत ।
आग कहाँ से पा गयी, बाला यह विपरीत ॥ (११०४)

வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.   (௲௱௫ - 1105)
 

इच्छित ज्यों इच्छित समय, आकर दें आनन्द ।
पुष्पालंकृत केशयुत, हैं बाला के स्कंध ॥ (११०५)

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.   (௲௱௬ - 1106)
 

लगने से हर बार है, नवजीवन का स्पंद ।
बने हुए हैं अमृत के, इस मुग्धा के स्कंध ॥ (११०६)

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.   (௲௱௭ - 1107)
 

स्वगृह में स्वपादर्थ का, यथा बाँट कर भोग ।
रहा गेहुँए रंग की, बाला से संयोग ॥ (११०७)

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.   (௲௱௮ - 1108)
 

आलिंगन जो यों रहा, बीच हवा-गति बंद ।
दोनों को, प्रिय औ’ प्रिया, देता है आनन्द ॥ (११०८)

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.   (௲௱௯ - 1109)
 

मान मनावन मिलनसुख, ये जो हैं फल-भोग ।
प्रेम-पाश में जो पड़े, उनको है यह भोग ॥ (११०९)

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.   (௲௱௰ - 1110)
 

होते होते ज्ञान के, यथा ज्ञात अज्ञान ।
मिलते मिलते सुतनु से, होता प्रणय-ज्ञान ॥ (१११०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: செஞ்சுருட்டி  |  Tala: மிஸ்ரசாப்பு
கண்ணிகள்:
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உளதாம் உண்மையில் - காதல்
கொண்டவர் தாம் புணர்ச்சி மகிழ்தலும் பெண்மையில்

தொட்டபோதெல்லாம் துளிர்க்கும் பட்டுமேனிப் பாவையிவளின்
தோளிரண்டும் அமிழ்தினாலே இயன்றதோ - இந்த
நாளின் இன்பம் பருவமழையாய்ப் பொழிந்ததோ

நீங்கும் போது வெம்மை செய்யும் நெருங்கும்போது தண்மைபெய்யும்
நிலவு போன்றாள் நெருப்பை எங்ஙனம் பெற்றனள் - என்னை
விலகிடாது தன் நோய்க்கும் மருந்தாய் உற்றனள்

ஊடல் உணர்தல் புணர்தல் காதல் கூடியார்தாம் பெற்றபயனாய்
உள்ளம் விரும்பும் யாவும் இவளிடம் தோன்றுதே - ஒரு
கள்ளமும் இல்லாது பகுத்துண்ணல் போன்றதே

பூமருவும் வண்டு போலவும் மாமரத்தில் மயிலைப் போலவும்
காமவல்லியின் தோளில் துயின்றிடும் துயில்எனில் - அந்தத்
தாமரைக் கண்ணான் உலகும் இனிது கொல்

அறியும்தோறும் அறியும்தோறும் அறிந்திடாமையைக் காண்பதேபோல்
அரியநூற் பயனாகும் சேயிழை இன்பமே - வாழ்க்கை
புரியவே எனை வாழ்த்திடும் குறள் செல்வமே




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22