परख कर विश्वास करना

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.   (௫௱௧ - 501)
 

धर्म-अर्थ औ’ काम से, मिला प्राण-भय चार ।
इन उपधाओं से परख, विश्वस्त है विचार ॥ (५०१)

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.   (௫௱௨ - 502)
 

जो कुलीन निर्दोष हो, निन्दा से भयभीत ।
तथा लजीला हो वही, विश्वस्त है पुनीत ॥ (५०२)

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.   (௫௱௩ - 503)
 

ज्ञाता विशिष्ट शास्त्र के, औ’ निर्दोष स्वभाव ।
फिर भी परखो तो उन्हें, नहिं अज्ञता-अभाव ॥ (५०३)

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.   (௫௱௪ - 504)
 

परख गुणों को फिर परख, दोषों को भी छान ।
उनमें बहुतायत परख, उससे कर पहचान ॥ (५०४)

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.   (௫௱௫ - 505)
 

महिमा या लघिमा सही, इनकी करने जाँच ।
नर के निज निज कर्म ही, बनें कसौटी साँच ॥ (५०५)

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.   (௫௱௬ - 506)
 

विश्वसनीय न मानिये, बन्धुहीन जो लोग ।
निन्दा से लज्जित न हैं, स्नेह शून्य वे लोग ॥ (५०६)

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.   (௫௱௭ - 507)
 

मूर्ख जनों पर प्रेमवश, जो करता विश्वास ।
सभी तरह से वह बने, जड़ता का आवास । (५०७)

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.   (௫௱௮ - 508)
 

परखे बिन अज्ञात पर, किया अगर विश्वास ।
संतित को चिरकाल तक, लेनी पड़े असाँस ॥ (५०८)

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.   (௫௱௯ - 509)
 

किसी व्यक्ति पर मत करो, परखे बिन विश्वास ।
बेशक सौंपो योग्य यद, करने पर विश्वास ॥ (५०९)

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.   (௫௱௰ - 510)
 

परखे बिन विश्वास भी, औ’ करके विश्वास ।
फिर करना सन्देह भी, देते हैं चिर नाश ॥ (५१०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சிந்துபைரவி  |  Tala: கண்ட ஆதி
கண்ணிகள்:
தெரிந்து தெளித்தலே நன்று - நாட்டின்
தேவைக்கு யார்மிகத் தக்கவர் என்று
விரிந்துள்ள மக்களின் தொகுதி - நன்மை
வேண்டியே பொறுப்பேற்க வருவோரின் தகுதி

ஆட்டுக்குக் காவல் ஓநாயா - கிளி
அன்புக்குப் பாலூட்டப் பூனைதான் தாயா
கேட்டுக்கு வழி தேடலாமா - நம்
கிளை யென்றே மாற்றானைக் கொண்டாடலாமா

பணமே படைத்தோன் என்றாலும் - அன்றி
படித்தவன் அன்புள்ள நண்பன் நின்றாலும்
குணம் நாடிக் குற்றமும் நாடி - அவற்றுள்
மிகை நாடி மிக்க கொள்வோம் குறள் நாடி

பழிக்கஞ்சி நாணிடும் தன்மை - பொருள்
பாவையர் மயக்கிலும் வீழாத வன்மை
அழியினும் உயிருக் கஞ்சாமை - உள்ள
அறங்கூறும் வினையாளன் ஆட்சிக்கு மேன்மை

பொன்னை உரைப்பது கல்லே - மனிதன்
தன்னை உரைப்பதும் அவன் செயல் சொல்லே
முன்னை ஆராய்ந்தவ னிடமே - ஐயம்
மோதாமல் நம்பிக்கை கொள்வதும் நலமே




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22