संकट में अनाकुलता

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.   (௬௱௨௰௧ - 621)
 

जब दुख-संकट आ पड़े, तब करना उल्लास ।
तत्सम कोई ना करे, भिड़ कर उसका नाश ॥ (६२१)

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.   (௬௱௨௰௨ - 622)
 

जो आवेगा बाढ़ सा, बुद्धिमान को कष्ट ।
मनोधैर्य से सोचते, हो जावे वह नष्ट ॥ (६२२)

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.   (௬௱௨௰௩ - 623)
 

दुख-संकट जब आ पड़े, दुखी न हो जो लोग ।
दुख-संकट को दुख में, डालेंगे वे लोग ॥ (६२३)

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.   (௬௱௨௰௪ - 624)
 

ऊबट में भी खींचते, बैल सदृष जो जाय ।
उसपर जो दुख आ पड़े, उस दुख पर दुख आय ॥ (६२४)

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.   (௬௱௨௰௫ - 625)
 

दुख निरंतर हो रहा, फिर भी धैर्य न जाय ।
ऐसों को यदि दुख हुआ, उस दुख पर दुख आय ॥ (६२५)

அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.   (௬௱௨௰௬ - 626)
 

धन पा कर, आग्रह सहित, जो नहिं करते लोभ ।
धन खो कर क्या खिन्न हो, कभी करेंगे क्षोभ ॥ (६२६)

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.   (௬௱௨௰௭ - 627)
 

देह दुख का लक्ष्य तो, होती है यों जान ।
क्षुब्ध न होते दुख से, जो हैं पुरुष महान ॥ (६२७)

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.   (௬௱௨௰௮ - 628)
 

विधिवश होता दुख है, यों जिसको है ज्ञान ।
तथा न सुख की चाह भी, दुखी न हो वह प्राण ॥ (६२८)

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.   (௬௱௨௰௯ - 629)
 

सुख में सुख की चाह से, जो न करेगा भोग ।
दुःखी होकर दुःख में, वह न करेगा शोक ॥ (६२९)

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.   (௬௱௩௰ - 630)
 

दुख को भी सुख सदृश ही, यदि ले कोई मान ।
तो उसको उपलब्ध हो, रिपु से मानित मान ॥ (६३०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: மத்தியமாவதி  |  Tala: ஆதி
பல்லவி:
இடுக்கண் வருங்கால் நகுக - மனமே
இடுக்கண் வருங்கால் நகுக
அடுத்தூர் வதும் அதனை
ஒப்பதில்லை அறிக

அநுபல்லவி:
அடுக்கியே வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும் எனும் குறள்வழி நின்றே

சரணம்:
தடைப்பட்ட இடமெல்லாம் தயங்காமலே கடக்கும்
தன்னாற்றல் மிக்க இரு பகடுகள் போல் நடக்கும்
இடைவிடா முயற்சியை இதயம் நிறையக் கற்போம்
எதற்குமே அஞ்சிடாமல் இமயமலைபோல் நிற்போம்

தன்னாட்சியால் விளங்கும் நாட்டின் பொதுச் சேவை
தாங்கிட நிற்பவர்கள் சாலவும் தேவை
இன்னாமையே இன்பம் என்னும் அவர் பிறப்பு
ஒன்னாறாம் விழையவே உண்டாக்குமாம் சிறப்பு




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22