सैन्य- माहात्म्य

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.   (௭௱௬௰௧ - 761)
 

सब अंगों से युक्त हो, क्षत से जो निर्भीक ।
जयी सैन्य है भूप के, ऐश्वर्यों में नीक ॥ (७६१)

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.   (௭௱௬௰௨ - 762)
 

छोटा फिर भी विपद में, निर्भय सहना चोट ।
यह साहस संभव नहीं, मूल सैन्य को छोड़ ॥ (७६२)

ஒலித்தக்கால் என்னாம் உவரி எல§ப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.   (௭௱௬௰௩ - 763)
 

चूहे-शत्रु समुद्र सम, गरजें तो क्या कष्ट ।
सर्पराज फुफकारते, होते हैं सब नष्ट ॥ (७६३)

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.   (௭௱௬௰௪ - 764)
 

अविनाशी रहते हुए, छल का हो न शिकार ।
पुश्तैनी साहस जहाँ, वही सैन्य निर्धार ॥ (७६४)

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.   (௭௱௬௰௫ - 765)
 

क्रोधिक हो यम आ भिड़े, फिर भी हो कर एक ।
जो समर्थ मुठ-भेड़ में, सैन्य वही है नेक ॥ (७६५)

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.   (௭௱௬௰௬ - 766)
 

शौर्य, मान, विश्वस्तता, करना सद्‍व्यवहार ।
ये ही सेना के लिये, रक्षक गुण हैं चार ॥ (७६६)

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து.   (௭௱௬௰௭ - 767)
 

चढ़ आने पर शत्रु के, व्यूह समझ रच व्यूह ।
रोक चढ़ाई खुद चढ़े, यही सैन्य की रूह ॥ (७६७)

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.   (௭௱௬௰௮ - 768)
 

यद्यपि संहारक तथा, सहन शक्ति से हीन ।
तड़क-भड़क से पायगी, सेना नाम धुरीण ॥ (७६८)

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.   (௭௱௬௰௯ - 769)
 

लगातार करना घृणा, क्षय होना औ’ दैन्य ।
जिसमें ये होते नहीं, पाता जय वह सैन्य ॥ (७६९)

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.   (௭௱௭௰ - 770)
 

रखने पर भी सैन्य में, अगणित स्थायी वीर ।
स्थायी वह रहता नहीं, बिन सेनापति धीर ॥ (७७०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: மோகனம்  |  Tala: ரூபகம்
பல்லவி:
படையின் மாட்சியே - இந்தப்
பார் முழுதும் பேர் விளங்கப்
போர் முனையில் வெற்றி முழங்கும்

அநுபல்லவி:
தடையே யின்றி எங்கும் செல்லும்
தன்னாற்றலால் பகையை வெல்லும்
தாங்கிடும் உறுப்பாக மேவிப்
பாங்குடன் வளர் செல்வமாகும்

சரணம்:
பெற்ற தன்னாட்சியால் வறுமைநோய் அற்றது
பேரணி வகுப்பிலும் பெருமையே பெற்றது
குற்றமில்லாத் தலை மக்கள் பால் கற்றது
கூற்றுடன்று மேல்வரினும்
கூடி எதிர்க்கும் ஆற்றலதுவே

"ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்" என்னும் குறளுரை
வலிவுள்ள வீரனால் மாண்புறும் போர்ப்படை
மானம் வீரம் நல்லொழுக்கம்
காணும் தேற்றம் நாளும் காக்கும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22