ಕೊಲ್ಲದಿರುವುದು

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.   (௩௱௨௰௧ - 321)
 

ಧರ್ಮವಾದ ಕಾರ್ಯ ಯಾವುದೆಂದರೆ ಕೊಲ್ಲದಿರುವುದು; ಕೊಲ್ಲುವುದು ಧರ್ಮವಲ್ಲದ ಪಾಪ ಕಾರ್ಯಗಳನ್ನು ಉಂಟು ಮಾಡುವುದು. (೩೨೧)

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.   (௩௱௨௰௨ - 322)
 

ಇದ್ದುದನ್ನು ಹಂಚಿಕೊಂಡು ಉಂಟು ಹಲವು ಜೀವಗಳನ್ನು ಕಾಪಾಡುವುದೇ, ಶಾಸ್ತ್ರಜ್ಞರು ಹೇಳಿರುವ ಧರ್ಮಗಳಲ್ಲೆಲ್ಲ ಮಿಗಿಲಾದುದು. (೩೨೨)

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.   (௩௱௨௰௩ - 323)
 

ಕೊಲ್ಲದಿರುವುದು ಎಲ್ಲದಕ್ಕೂ ಮೇಲಾದ ಒಳ್ಳೆಯ ಗುಣ; ಸುಳ್ಳು ಹೇಳದಿರುವುದು ಅದಕ್ಕೆ ಎರಡನೆಯದು. (೩೨೩)

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.   (௩௱௨௰௪ - 324)
 

ಯಾವೊಂದು ಪ್ರಾಣಿಯನ್ನು ಕೊಲ್ಲುವುದನ್ನು ತಪ್ಪಿಸುವ ಮಾರ್ಗವೇ ಶಾಸ್ತ್ರಗ್ರಂಥಗಳು ಹೇಳುವ ಮಾರ್ಗಗಳಲ್ಲೆಲ್ಲ ಒಳ್ಳೆಯದು. (೩೨೪)

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.   (௩௱௨௰௫ - 325)
 

ಸಂಸಾರ, ಹುಟ್ಟುಗಳ ನೆಲೆಗಂಜಿ, ಆಶಗಳನ್ನು ತೊರೆದು ಸನ್ಯಾಸಿಗಳಾದವರಲ್ಲಿಯೂ, ಕೊಲೆಗಂಜಿ ಕೊಲ್ಲದಿರುವ ಧರ್ಮವನ್ನು ಕೈಕೊಂಡವರೇ ಮೇಲಾದವರು ಎನಿಸಿಕೊಳ್ಳುತ್ತಾರೆ. (೩೨೫)

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.   (௩௱௨௰௬ - 326)
 

ಕೊಲ್ಲದಿರುವ ಧರ್ಮವನ್ನು ಕೈಕೊಂಡು ನಡೆಯುವವನ ಬಾಳನಡೆಯ ಮೇಲೆ ಜೀವಗಳನ್ನು ಕೊಂಡುಂಬ ಮೃತ್ಯು ಬಂದು ಎರಗಲಾರದು. (೩೨೬)

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.   (௩௱௨௰௭ - 327)
 

ತನ್ನ ಪ್ರಾಣ ಹೋದರೂ (ಅದರ ರಕ್ಷಣೆಗಾಗಿ) ಬೇರೊಂದು ಇನಿಯೊಡಲನ್ನು ಕೊನೆಗಾಣಿಸುವ ಕೊಲೆಗೆಲಸ ಮಾಡಬಾರದು. (೩೨೭)

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.   (௩௱௨௰௮ - 328)
 

(ಯಜ್ಞ ಯಾಗಾದಿಗಳಲ್ಲಿ) ಕೊಲೆ ಮಾಡುವುದರಿಂದ ಎಷ್ಟೇ ಹಿರಿದಾದ ಸುಖ ಸಂಪತ್ತುಗಳು ಉಂಟಾದರೂ, ತಿಳಿದವರ ದೃಷ್ಟಿಯಲ್ಲಿ, ಕೊಲ್ಲುವುದರಿಂದ ಬರುವ ಸಿರಿಯು ಕೀಳಾದುದು. (೩೨೮)

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.   (௩௱௨௰௯ - 329)
 

ಕೀಳು ಕೆಲಸ ಯಾವುದು ಎಂದು ತಿಳಿದವರ ಮನಸ್ಸಿನಲ್ಲಿ, ಕೊಲೆಗೆಲಸ ಮಾಡುವವರು ಹೊಲೆಗೆಲಸದವರೆಂದು ಗಣಿಸಲ್ಪಡುತ್ತಾರೆ. (೩೨೯)

உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.   (௩௱௩௰ - 330)
 

(ಹಿಂದಿನ ಜನ್ಮದಲ್ಲಿ) ಪ್ರಾಣವನ್ನು ಒಡಲಿನಿಂದ ಬೇರ್ಪಡಿಸಿದವರೇ (ಕೊಲೆಗಡುಕರೇ) ಈ ಜನ್ಮದಲ್ಲಿ ರೋಗರುಜಿನಗಳಿಂದ ನವೆದು ಕೀಳಾದ ಬಾಳು ನಡೆಸುವರು ಎಂದು (ಬಲ್ಲವರು) ಹೇಳುವರು. (೩೩೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சகானா  |  Tala: ஆதி
பல்லவி:
கொலை செய்யும் எண்ணமோ கொண்டீர் நீர் ஐயா
கூடுமோ இது சொல்வீர் நல் வாழ்க்கையில்

அநுபல்லவி:
மலையெனவோ உமது வாழ்நாளை மதித்தீர்
மற்ற உயிரைக் கொல்லும்
குற்றமேனோ அடுத்தீர்

சரணம்:
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" என்று மேலோர்
வகுத்த நல்லாறெனப்படுவதேன் மறந்தீர்
வாழ்ந்திடும் உயிர்களை வதைக்கவோ பிறந்தீர்

தன்னுயிர் நீப்பினும் உயிர்க்கொலை தகுமா
தாழ்விலங்காவதில் உமக்குச் சம்மதமா
மன்னுயிர் ஓம்பும் நல்லறம் விளங்கிடுமா
வண்டமிழ்க் குறள்வரி உன் கண்ணிற்படுமா




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22