Raga: சுருட்டி | Tala: ரூபகம் பல்லவி:ஊருடனே கூடிவாழ் நண்பா! - நீ
ஒப்புர வறிந்தே
எப்பொழுதும் நன்றே
அநுபல்லவி:ஏருழவர் முதல் எண்ணும் தொழிலாளர்
யாவரும் நின் செல்வம்
ஏற்றுயர்ந்தார் என
சரணம்:பயன் எதிர்பாராத பண்பினிலே நின்று
பழுமரம் ஊருணி பருவமழை என்று
நயம்படவே நல்லோர் நவிலும்வழி சென்று
நாடும் நின்வாழ்க்கையை அமைத்துக்கொள்வாய் நன்று
"இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சியோர்" என்றுன்னையே கொள்வர்
உடன்படவே என்றும் மற்றவர்க்குதவி செய்
ஓதும் திருக்குறள் நீதியில் கவனம் வை