ಅರಿತು ನಂಬುವ ಬಗೆ

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.   (௫௱௧ - 501)
 

(ಒಬ್ಬನ) ಧಾರ್ಮಿಕ ನಡತೆ, ಧನಾಸಕ್ತಿ, ಕಾಮಾಸಕ್ತಿ, ಜೀವಭಯ- ಈ ನಾಲ್ಕು ಗುಣಗಳನ್ನು ಶೋಧಿಸಿದ ತರುವಾಯವೇ ಅವನನ್ನು (ಮಂತ್ರಿ) ಕೆಲಸಕ್ಕೆ ಅರ್ಹನೆಂದು ತೀರ್ಮಾನಿಸಬೇಕು. (೫೦೧)

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.   (௫௱௨ - 502)
 

ಉತ್ತಮ ಕುಲದಲ್ಲಿ ಹುಟ್ಟಿ, ದೋಷಗಳನ್ನು ನೀಗಿಕೊಂಡು ನಿಂದಾತ್ಮಕ ಕಾರ್ಯಗಳನ್ನು ಮಾಡಲಂಜುವ, ಲಜ್ಜೆಯುಳ್ಳವನನ್ನೇ ನಂಬಿ (ಒಂದು ಕೆಲಸಕ್ಕೆ) ತೀರ್ಮಾನಿಸಬೇಕು. (೫೦೨)

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.   (௫௱௩ - 503)
 

ದುರ್ಲಭ ಗ್ರಂಥಗಳನ್ನು ಓದಿ ತಿಳಿದು, ದೋಷಗಳನ್ನು ನಿವಾರಿಸಿಕೊಂಡವರನ್ನು ಪರೀಕ್ಷಿಸುವಾಗಲೂ (ಅವರಲ್ಲಿ) ಅಜ್ಞಾನವಿಲ್ಲದಿರುವುದು ಅಪರೂಪವೆಂಬುದು ಕಂಡು ಬರುವುದು. (೫೦೩)

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.   (௫௱௪ - 504)
 

(ಅರಸನಾದವನು) (ಒಬ್ಬನ) ಗುಣ, ದೋಷಗಳನ್ನು ಪರೀಕ್ಷಿಸಿ, ಅವನಲ್ಲಿ ಉಳಿದ ಗುಣಗಳೇನೆಂಬುದು ವಿಚಾರಿಸಿ, ಅವುಗಳಿಂದ ಅರ್ಹತೆಯನ್ನು ಕುರಿತು ತೀರ್ಮಾನಕ್ಕೆ ಬರಬೇಕು. (೫೦೪)

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.   (௫௱௫ - 505)
 

ಒಬ್ಬನಲ್ಲಿರುವ ಹಿರಿಯ ಗುಣಗಳಿಗೂ, ಅಲ್ಪ ಗುಣಗಳಿಗೂ, ಅವನಿಗೆ ದತ್ತವಾಗಿ ಬಂದ ಕರ್ಮವೇ ಒರೆಗಲ್ಲಾಗುವುದು. (೫೦೫)

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.   (௫௱௬ - 506)
 

ತಮ್ಮವರು ಎಂಬ ಸಂಬಂಧವೇ ಇಲ್ಲದಿರುವವರನ್ನು ಅರಸನಾದನು ನಂಬದೆ ದೂರವಿರಿಸಬೇಕು; ಏಕೆಂದರೆ ಅಂಥವರು ಯಾರ ಅಂಕೆಯೂ ಇಲ್ಲದೆ ತಪ್ಪು ಮಾಡಲೂ ನಾಚುವುದಿಲ್ಲ. (೫೦೬)

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.   (௫௱௭ - 507)
 

ಪ್ರೀತಿ, ಪಕ್ಷಪಾತಗಳಿಂದ ಏನೂ ಅರಿಯದ ಮೂರ್ಖರನ್ನು ನಂಬಿ ಒಂದು ಕೆಲಸಕ್ಕೆ ಅರಿಸುವುದು, ಮೂರ್ಖತನದ ಪರಮಾವಧಿಯೆನಿಸುತ್ತದೆ. (೫೦೭)

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.   (௫௱௮ - 508)
 

ಬೇರೊಬ್ಬನ ಬಗ್ಗೆ ಒಂದೂ ತಿಳಿಯದೆ ಒಂದು ಕೆಲಸಕ್ಕೆ ನಿರ್ಧರಿಸುವ ಅರಸನು, (ಅವನಿಗೆ ಮಾತ್ರವಲ್ಲದೆ) ಅವನ ಸಂತತಿಗೂ ತೀರದ ದುಃಖವನ್ನು ತರುತ್ತಾನೆ. (೫೦೮)

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.   (௫௱௯ - 509)
 

ಅರಸನಾದವನು ಯಾರನ್ನೂ ಹಿನ್ನೆಲೆ ಅರಿಯದೆ ನಂಬಕೂಡದು. ಚೆನ್ನಾಗಿ ಪರಿಶೀಲಿಸಿದ ಮೇಲೆ ಅವರಲ್ಲಿ ನಂಬತಕ್ಕ ಗುಣಗಳನ್ನು ಕಂಡು ನಂಬಬೇಕು. (೫೦೯)

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.   (௫௱௰ - 510)
 

(ಒಬ್ಬನನ್ನು) ತಿಳಿಯದೆ ನಂಬುವುದೂ, ನಂಬಿದ ಮೇಲೆ ಅವನನ್ನು ಸಂದೇಹಿಸುವುದೂ ಅರಸನಿಗೆ ತೀರದ ದುಃಖವನ್ನು ಉಂಟುಮಾಡುತ್ತವೆ. (೫೧೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சிந்துபைரவி  |  Tala: கண்ட ஆதி
கண்ணிகள்:
தெரிந்து தெளித்தலே நன்று - நாட்டின்
தேவைக்கு யார்மிகத் தக்கவர் என்று
விரிந்துள்ள மக்களின் தொகுதி - நன்மை
வேண்டியே பொறுப்பேற்க வருவோரின் தகுதி

ஆட்டுக்குக் காவல் ஓநாயா - கிளி
அன்புக்குப் பாலூட்டப் பூனைதான் தாயா
கேட்டுக்கு வழி தேடலாமா - நம்
கிளை யென்றே மாற்றானைக் கொண்டாடலாமா

பணமே படைத்தோன் என்றாலும் - அன்றி
படித்தவன் அன்புள்ள நண்பன் நின்றாலும்
குணம் நாடிக் குற்றமும் நாடி - அவற்றுள்
மிகை நாடி மிக்க கொள்வோம் குறள் நாடி

பழிக்கஞ்சி நாணிடும் தன்மை - பொருள்
பாவையர் மயக்கிலும் வீழாத வன்மை
அழியினும் உயிருக் கஞ்சாமை - உள்ள
அறங்கூறும் வினையாளன் ஆட்சிக்கு மேன்மை

பொன்னை உரைப்பது கல்லே - மனிதன்
தன்னை உரைப்பதும் அவன் செயல் சொல்லே
முன்னை ஆராய்ந்தவ னிடமே - ஐயம்
மோதாமல் நம்பிக்கை கொள்வதும் நலமே




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22