Raga: அம்சத்வனி | Tala: ரூபகம் பல்லவி:மான வாழ்வு வாழ வேண்டுமே - தன்
மான வாழ்வு வாழ வேண்டுமே
அநுபல்லவி:ஆன குடியின் பெருமை தோன்ற
அஞ்சாமையிற் சிங்கம் போன்ற
ஆண்மை கொண்டு மேன்மை கண்டு
அல்லல் வரினும் எதிர்த்து நின்று
சரணம்:ஒட்டார் பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்றென்னும் குறள் நெறியே
சுட்டாலும் வெண்மை தரும் சங்கெனும் நல்லினவழியே
சுருக்கத்தினில் உயர்வு வேண்டும் பெருக்கத்தினில் பணிவு வேண்டும்
தன்னிலையிற் பிரியாமல் தகைமை என்றும் குறையாமல்
தான் பசியால் வருந்திடினும் தன்மானம் அழியாமல்
மன்னுகின்ற புகழ் விளக்கம் மாசு சிறிதும் படியாமல்
மயிர் நீப்பினும் உயிர் நீத்திடும் மானமிக்க கவரி மான்போல்