ತಪ್ಪು

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.   (௪௱௩௰௧ - 431)
 

ಗರ್ವ, ಕೋಪ, ಕಾಮಗಳೆಂಬ (ದೋಷಗಳು) ಇಲ್ಲದವರ ಬಾಳಿನಲ್ಲಿ ಕಾಣುವ ಹಿರಿಮೆಯು ಮೇಲು ಮಟ್ಟದಾಗಿರುವುದು. (೪೩೧)

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.   (௪௱௩௰௨ - 432)
 

ಲೋಭ, ಗೌರವ ತಾರದ ಸ್ವಾಭಿಮಾನ, ಅರ್ಥವಿಲ್ಲದ ಸಂತೋಷ ಇವೆಲ್ಲವೂ ಅರಸನಲ್ಲಿರುವ ದೋಷಗಳೆನಿಸುವುವು. (೪೩೨)

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.   (௪௱௩௰௩ - 433)
 

ನಿಂದೆಗೆ ನಾಚುವವರು, ತೆನೆಯ ಕಾಳಿನಷ್ಟು ಅಲ್ಪವಾದ ಅಪರಾಧ ತಮ್ಮಿಂದ ನಡೆದರೂ, ಅದನ್ನು ಹನೆಯಷ್ಟು (ತಾಳೆಮರದಷ್ಟು) ದೊಡ್ಡದಾಗಿ ಭಾವಿಸುವರು. (೪೩೩)

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.   (௪௱௩௰௪ - 434)
 

ಅಪರಾಧ ಮಾಡದಿರುವುದನ್ನೇ ಧ್ಯೇಯವಾಗಿ ಕಾದುಕೊಳ್ಲಬೇಕು. ಏಕೆಂದರೆ ಅಪರಾಧವೇ ಅಳಿವನ್ನು ತರುವಂಥ ಹಗೆ. (೪೩೪)

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.   (௪௱௩௰௫ - 435)
 

ಅಪರಾಧವುಂಟಾಗುವ ಮುನ್ನವೇ ಬರದಂತೆ ಕಾದುಕೊಳ್ಲದಿರುವವನ ಬಾಳು; ಬೆಂಕಿಯ ಮುಂದಿರುವ ಹುಲ್ಲಿನ ಬಣವೆಯಂತೆ ನಾಶವಾಗುವುದು. (೪೩೫)

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.   (௪௱௩௰௬ - 436)
 

ಮುಂದಾಗಿ ತನ್ನ ದೋಷಗಳನ್ನು ನಿವಾರಿಸಿಕೊಂಡು, ಬೇರೆಯವರ ದೋಷಗಳನ್ನು ಸೂಕ್ಷ್ಮವಾಗಿ ಕಾಣಬಲ್ಲ ಅರಸನಿಗೆ ಬೇರೇನು ದೋಷಗಳು ಸಂಭವಿಸುವುವು? (೪೩೬)

செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.   (௪௱௩௰௭ - 437)
 

ಮಾಡಬೇಕಾದ ಒಳ್ಳೆಯ ಕಾರ್ಯಗಳನ್ನು ಮಾಡದೆ, ಇರುವ ಲೋಲುಪನ ಸಿರಿಯು, ಸಿರಿಯಾದ ಚಲಾವಣೆಯಿಲ್ಲದೆ ನಾಶವಾಗುವುದು. (೪೩೭)

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.   (௪௱௩௰௮ - 438)
 

ಪರರಿಗೆ ಕೊಡದೆ ಬಲವಾಗಿ ಅಂಟಿಕೊಳ್ಲುವ ಆಸೆಬುರುಕತನವು, ಬೇರೆ ಅಪರಾಧಗಳೊಂದಿಗೆ ಎಣಿಸಲ್ಪಡುವುದೂ ಇಲ್ಲ; ಅಂದರೆ- ಇದೇ ಮಿಗಿಲಾದ ಅಪರಾಧ ಎನಿಸಿ ಕೊಳ್ಳುತ್ತದೆ. (೪೩೮)

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.   (௪௱௩௰௯ - 439)
 

ಯಾವ ಕಾಲದಲ್ಲಿಯೂ, ತನ್ನನ್ನು ಮೇಲಾಗಿ ಭಾವಿಸಿ ಹೊಗಳಿಕೊಳ್ಲಬಾರದು. ಒಳಿತು ಫಲಿಸದ ಕೆಲಸಗಳನ್ನು ಬಯಸಲೂ ಬಾರದು. (೪೩೯)

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.   (௪௱௪௰ - 440)
 

ಅರಸನಾದವನು, ತಾನು ಬಯಸಿದುದನ್ನು ಇತರರಿಗೆ ತಿಳಿಯದಂತೆ ಅನುಬೋಗಿಸಬಲ್ಲವನಾದರೆ, ಹಗೆಗಳು ತನ್ನನ್ನು ಪಂಚಿಸಲು ಹೂಡಿದ ಉಪಾಯಗಳೆಲ್ಲ ಫಲಿಸದೆ ಹೋಗುವುವು. (೪೪೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: அட்டாணா  |  Tala: ரூபகம்
பல்லவி:
ஓடிப் போ! போ! குற்றமே! நீ
ஓடிப் போய் விடுவாய்
ஒரு நொடியும் நிற்காதே
மறுபடி கால் வைக்காதே

அநுபல்லவி:
தேடிப்பெற்ற அறிவுச் செல்வம்
தேர்ந்த மக்கள் ஆட்சிச் செல்வம்
கூடி வாழும் நேரத்திலே
குற்றமே நீ உட் புகுந்தால்
கொன்றிடுவோம் கூரம்பால்

சரணம்:
அழவைத் தரும் பகையாய் வரும் குற்றமே
அறியாமை கல்லாமை ஈயாமை குற்றமே
வழிவிட்டுத் தன்புகழ் பேசிடும் குற்றமே
மான முறை கெட்டாயே
மாய வலைப் பட்டாயே

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்திடும் தூறுபோல் கெடும் எனவே மன்னர்
பெறுமதி கொள்ளவே பேசும் திருக்குறள்
பெரியாரின் துணை கண்டோம்
பிழை பட்டாய் உனை வேண்டோம்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22