ಅರಸನ ಹಿರಿಮೆ

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.   (௩௱௮௰௧ - 381)
 

ಪಡೆ, ಜನತೆ, ಸಂಪತ್ತು, ಮಂತ್ರಿ, ಕೆಳೆ ಮತ್ತು ಕೋಟೆ ಎಂಬ ಆರು ಅಂಗಗಳನ್ನು ಉಳ್ಳವನು ಅರಸರಲ್ಲಿ ಪುರುಷ ಸಿಂಹವೆಂದು ಕರೆಸಿಕೊಳ್ಳುತ್ತಾನೆ. (೩೮೧)

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.   (௩௱௮௰௨ - 382)
 

ಧೈರ್ಯ, ದಾನ, ಜ್ಞಾನ ಮತ್ತು ಪ್ರಯತ್ನ- ಈ ನಾಲ್ಕು ಗುಣಗಳಲ್ಲಿ ಯಾವಾಗಲೂ ಸೋಲದೆ ನಿರಂತರವಾಗಿರುವುದೇ ಅರಸನ ಗುಣಗಳೆನಿಸುವುದು. (೩೮೨)

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.   (௩௱௮௰௩ - 383)
 

(ಸದಾ) ಎಚ್ಚರ, ವಿದ್ಯೆ ಮತ್ತು ಪರಾಕ್ರಮ ಇವು ಮೂರೂ ನೆಲವಾಳುವವನನ್ನು ಬಿಟ್ಟು ಹೋಗಬಾರದು. (೩೮೩)

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.   (௩௱௮௰௪ - 384)
 

ಧರ್ಮವನ್ನು ಬಿಡದೆ ಧರ್ಮ ವಲ್ಲದುದನ್ನು ನೀಗಿ, ಪರಾಕ್ರಮದಲ್ಲಿ ಕುಗ್ಗದೆ ಅಭಿಮಾನ ಧನನಾಗಿರುವವನೇ ಅರಸು. (೩೮೪)

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.   (௩௱௮௰௫ - 385)
 

(ಐಶ್ವರ್ಯವನ್ನು) ಸಂಪಾದಿಸಿ, ಸೇರಿಸಿಟ್ಟು ಕಾಪಾಡಿ (ಸಮನಾಗಿ) ಹಂಚಲು ಬಲ್ಲವನೇ ಅರಸು. (೩೮೫)

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.   (௩௱௮௰௬ - 386)
 

ಕಾಣಲು ಸುಲಭನಾಗಿ, ಕಡುನುಡಿಗಳನ್ನು ಆಡದವನಾಗಿದ್ದರೆ, ಆ ಅರಸನ ಆಳ್ವಿಕೆಗೊಳಪಟ್ಟ ನಾಡನ್ನು ಲೋಕವೇ ಹೊಗಳುವುದು. (೩೮೬)

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.   (௩௱௮௰௭ - 387)
 

ಇನಿದಾದ ಮಾತುಗಳಿಂದ (ತಕ್ಕವರಿಗೆ) (ವಸ್ತುಗಳನ್ನು) ಉದಾರವಾಗಿ ಕೊಟ್ಟು ಕಾಪಾಡಬಲ್ಲ ಅರಸನಿಗೆ ಈ ಲೋಕವು ವಿಧೇಯವಾಗಿ, ಅವನು ಹೇಳಿದಂತೆ ನಡೆದುಕೊಳ್ಳುತ್ತದೆ. (೩೮೭)

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.   (௩௱௮௰௮ - 388)
 

(ತನ್ನ ಜನರಿಗೆ) ನ್ಯಾಯ ನೀಡಿ, ಕಾಪಾಡುವ ಅರಸನನ್ನು ಜನರು (ಪ್ರತ್ಯಕ್ಷ) ದೇವರೆಂದು ಗೌರವಿಸುವರು. (೩೮೮)

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.   (௩௱௮௰௯ - 389)
 

(ದೊರುವವರ) ಕಹಿ ಮಾತುಗಳನ್ನು ಕಿವಿಯಲ್ಲಿ ಕೇಳಿ ತಾಳಿಕೊಳ್ಳುವ ಗುಣವುಳ್ಳ ಅರಸನ ಕೃಪಾ ಛತ್ರದಡಿಯ ನೆರಳಲ್ಲಿ ಲೋಕವೇ ತಂಗುತ್ತದೆ. (೩೮೯)

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.   (௩௱௯௰ - 390)
 

ಕೊಡುವಿಕೆ (ದಾನ), ಅನುಗ್ರಹ, ಸಮನ್ಯಾಯ, ಆಶ್ರಿತ ಜನರ ರಕ್ಷಣೆ ಈ ನಾಲ್ಕು (ಗುಣಗಳನ್ನು) ಉಳ್ಳ ಅರಸನು ಅರಸರಿಗೆಲ್ಲಾ ಬೆಳಕಿನಂತೆ ಇರುವನು. (೩೯೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: வாசஸ்பதி  |  Tala: ஆதி
பல்லவி:
இறை மாட்சி நலம் வாழ்கவே - மக்கள்
எல்லோரும் இன்புறவே
முறை செய்து காப்பாற்றும்

அநுபல்லவி:
நிறை காட்சிக் கெளியவன் இன்சொலனாக
நேசர் இதம் கூறும்
நில வுலகம் வாழ்த்தும்

சரணம்:
நாடும் குடிப்பரப்பும் நால்வகைப் படையும்
நல்லமைச்சும் செல்வமும் நட்பும் வல்லரணும்
கூடும் நிலையுடையான் அரசருள் ஏறாம்
கோதிலா வீரமும் மானமும் மேலாம்

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்தவை
வகுத்தலும் வல்லதே அரசெனச் சேர்த்தவை
பயிற்றிடும் கல்வியுடன் துணிவு தூங்காமை
பைந்தமிழ்க் குறளறம் பரவும் செங்கோன்மை




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22