ಮರೆಯದಿರುವಿಕೆ

இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.   (௫௱௩௰௧ - 531)
 

ಕಾಮಾದಿಗಳಿಂದುಂಟಾದ ಅತಿ ಆನಂದದಿಂದ ಬರುವ ಮರವೆ, ಅತಿ ಕೋಪದಿಂದ ಬರುವ ಮರವೆಗಿಂತ ಕೆಟ್ಟದು. (೫೩೧)

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.   (௫௱௩௰௨ - 532)
 

ನಿತ್ಯದಾರಿದ್ರ್ಯ ಅರಿವನ್ನು ಕೊಲ್ಲುವಂತೆ ಮರವೆಯು ಒಬ್ಬನ ಕೀರ್ತಿಯನ್ನು ಕೆಡಿಸುತ್ತದೆ. (೫೩೨)

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.   (௫௱௩௰௩ - 533)
 

ಮರವೆಯ ವಶವಾದವರಿಗೆ ಕೀರ್ತಿಯಿಂದ ಬಾಳುವ ನೆಲೆ ಇಲ್ಲ. ಅದು ಲೋಕದಲ್ಲಿರುವ ಎಲ್ಲಾ ವಿಚಾರಶೀಲರೂ ಒಪ್ಪುವಂಥ ನಂಬಿಕೆ. (೫೩೩)

அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.   (௫௱௩௰௪ - 534)
 

(ಮನಸ್ಸಿನಲ್ಲಿ) ಅಂಜಿಕೆ ಇರುವವರಿಗೆ, ಕೋಟೆಯ ರಕ್ಷಣೆ ಇದ್ದರೂ ಫಲವಿಲ್ಲ. ಅದೇ ರೀತಿ ಮರವೆಯ ವಶವಾದವರಿಗೆ (ಎಲ್ಲ ಅನುಕೂಲವಿದ್ದರೂ) ಫಲವಿಲ್ಲ. (೫೩೪)

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.   (௫௱௩௰௫ - 535)
 

ಮುಂದೆ ಬರಲಿರುವ ಸಂಕಟಗಳನ್ನು ತಿಳಿದು ಕಾಯ್ದುಕೊಳ್ಳದೆ ಮರೆತು ಬಿಡುವವನು. ಅವು ಬಂದ ಮೇಲೆ ತನ್ನ ಸ್ಥಿತಿಯನ್ನು ನೆನೆದು ಪಶ್ಚಾತ್ತಾಪಪಡುವನು. (೫೩೫)

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.   (௫௱௩௰௬ - 536)
 

ಯಾರಲ್ಲೂ ಯಾವ ಕಾಲದಲ್ಲೂ ಮರವೆಯಿಂದ ಪರವಶವಾಗದಿರುವ ಸ್ಥಿತಿಯ ತಪ್ಪದೆ ಇದ್ದರೆ, ಅದಕ್ಕೆ ಒಪ್ಪುವಂಥದು ಬೇರೆ ಇಲ್ಲ. (೫೩೬)

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.   (௫௱௩௰௭ - 537)
 

ಮರೆಯದಿರುವಿಕೆಯೆಂಬ ಸಾಧನದಿಂದ, ಕರ್ತವ್ಯಗಳನ್ನು ಪಟ್ಟು ಹಿಡಿದು ಮಾಡಿದರೆ, ಅಸಾಧ್ಯವೆಂದು ಆಗದಿರುವ ಕಾರ್ಯ ಒಂದೂ ಇಲ್ಲ. (೫೩೭)

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.   (௫௱௩௰௮ - 538)
 

ತಿಳಿದವರು ಕೀರ್ತಿಸಿ ಹೇಳಿದ ಕಾರ್ಯಗಳನ್ನು ಸಾಧಿಸಿಮಾಡಿ ತೋರಿಸ ಬೇಕು; ಮಾಡದೆ ಮರೆತುಬಿಟ್ಟರೆ, ಏಳು ಜನ್ಮಗಳಲ್ಲೂ ಒಳಿತಾಗುವುದಿಲ್ಲ. (೫೩೮)

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.   (௫௱௩௰௯ - 539)
 

(ಅರಸನಾದವನು) ತನ್ನ ಸಂತೋಷದಲ್ಲಿ ಮೈಮರೆತಿರುವಾಗ, ಆ ರೀತಿ ಮರೆತು ಕೆಟ್ಟವರನ್ನು ನೆನೆದುಕೊಳ್ಳಬೇಕು. (೫೩೯)

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.   (௫௱௪௰ - 540)
 

(ಅರಸನಾದವನು) ಆಲೋಚಿಸಿದುದನ್ನು ಬಿಡದೆ, ಮತ್ತೆ ಮತ್ತೆನೆನೆದುಕೊಳ್ಳುತ್ತಿದ್ದರೆ, ಅವನು ಬಯಸಿದುದನ್ನು ಪಡೆದುಕೊಳ್ಳುವುದು ಸುಲಭವಾಗುವುದು. (೫೪೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: குந்தலவராளி  |  Tala: ஆதி
பல்லவி:
ஆனாலும் உமக்கிந்த மறதி ஆகாது
ஐயா வெகுளியினும் இது மிகத் தீது

அநுபல்லவி:
போனால் உயிர் வருமோ பொருளும் பயன் தருமோ
புகழும் செயல்கள் செய்ய மறப்பதுவும் தகுமோ

சரணம்:
கிளையை வளர விட்டுப் பயிரையே அழிப்பதா
கண் மண் தெரியாமலே பலரையும் பழிப்பதா
விளைவை எண்ணிப் பாராமல் வீண்காலம் கழிப்பதா
வீட்டிற்கு வேண்டியதைக் கேட்டபின் விழிப்பதா

அச்சமுடையவர்க்கே அரண் எங்குமில்லை
அறிவுக்கும் அழகுக்கும் வறுமையால் தொல்லை
பொச்சாப் புடையவர்க்கும் நன்மையே இல்லை
புரிந்து முன் காக்க வேண்டும் திருக்குறள் சொல்லை




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22