ಜೂಜು

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.   (௯௱௩௰௧ - 931)
 

ಜೂಜಿನಲ್ಲಿ ಗೆಲುವುದಾದರೂ ಜೂಜನ್ನು ಬಯಸಬಾರದು; ಆ ಗೆಲ್ಲುವಿಕೆ ಕೂಡ, ಗಾಳದ ತುದಿಯ ಲೋಹವನ್ನು ಮೀನು (ಆಹಾರವೆಣ್ದು ಎಣಿಸಿ) ನುಂಗಿದಂತೆ. (೯೩೧)

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.   (௯௱௩௰௨ - 932)
 

ಒಂದನ್ನು ಗೆದ್ದು ನೂರ್ಮಡಿಯಾಗಿ ಕಳೆದುಕೊಳ್ಳುವ ಜೂಜು ಕೋರರಿಗೆ ಸುಖ ಪಡೆದು ಬಾಳುವ ಮಾರ್ಗವುಂಟೆ? (೯೩೨)

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.   (௯௱௩௰௩ - 933)
 

(ಅರಸನಾದವನು) ಉರುಳುವ ದಾಳವನ್ನು ಊಹಿಸಿ ಹೇಳಿ ಬರುವ ಹಣವನ್ನು ಎಡೆಬಿಡದೆ ತೊಡಗಿಸಿ ಜೂಜಾಡಿದರೆ, ಅವನ ಗಳಿಕೆಯು ಕೈತಪ್ಪಿ ಹೋಗಿ ಇತರರ (ಹಗೆಗಳ) ಕೈ ಸೇರುವುದು. (೯೩೩)

சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.   (௯௱௩௰௪ - 934)
 

ಹಲವು ತೆರದ ದುಃಖಗಳನ್ನು ತಂದೊಡ್ಡಿ ಕೀರ್ತಿಯನ್ನು ಅಳಿಸುವ ಜೂಜಿಗಿಂತ ದಾರಿದ್ರ್ಯ ತರುವುದು ಬೇರೊಂದಿಲ್ಲ. (೯೩೪)

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.   (௯௱௩௰௫ - 935)
 

ದ್ಯೂತದ ದಾಳಗಳನ್ನು ಆಡುವ ಕೂಟವನ್ನು ತಮ್ಮ ಕೈಬಳಕವನ್ನೂ ಮೆಚ್ಚಿ ಬಯಸಿ ಕೈಬಿಡಲಾರದ ಅರಸರು ಸಿರಿಯಲ್ಲಿ ಕಳೆದುಕೊಂಡು ದರಿದ್ರರಾರುತಾರೆ. (೯೩೫)

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.   (௯௱௩௰௬ - 936)
 

ಜೂಜು ಎನ್ನುವ ಮೂದೇವಿಯ ವಶವಾದದರು ಬದುಕ್ಕಿದ್ದಾಗ ತಾವು ತಮ್ಮ ಹೊಟ್ಟೆ ತುಂಬ ಉಣ್ಣದೆ ಹಲವು ದುಃಖಗಳಿಂದ ಬಾಧಿಸಲ್ಪಟ್ಟು ನರಕಕೆ ಹೋಗುವರು. (೯೩೬)

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.   (௯௱௩௰௭ - 937)
 

ಜೂಜಡುವ ಕೂಟದಲ್ಲಿ ಅರಸನು ಧರ್ಮ, ಅರ್ಥ, ಕಾಮಗಳನ್ನು ಮೀರಿ ಕಾಲಹರಣ ಮಾಡಿದರೆ, ಪರಂಪರಯಾಗಿ ಅವನಿಗೆ ಬಂದ ಸಿರಿಸಂಪತ್ತುಗಳೂ ಮತ್ತು ಸ್ವಾಭಾವಿಕವಾದ ಸದ್ಗುಣಗಳೂ ನಾಶವಾಗಿ ಹೋಗುತ್ತವೆ. (೯೩೭)

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.   (௯௱௩௰௮ - 938)
 

ಜೂಜು ಹಣವನ್ನು ಕಳೆದುಕೊಂಡು ಸುಳ್ಳು ಹೇಳುವಂತೆ ಮಾಡುವುದು; ದೈವ ಕೃಪಯನ್ನು ಕೆಡಿಸಿ ಹಲ ತೆರನಾದ ದುಃಖಗಳನ್ನು (ಇಹಪರಗಳೆರಡರಲ್ಲೂ) ತಂದೊಡ್ಡುವುದು. (೯೩೮)

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.   (௯௱௩௰௯ - 939)
 

ಒಬ್ಬನು ಜೂಜಾಡುವುದನ್ನು ಕೈಗೊಂಡರೆ, ಉಡುಪು, ಸಿರಿ, ಆಹಾರ, ಕೀರ್ತಿ ಮತ್ತು ಜ್ಞಾನವೆಂಬ ಐದು ಅವನಿಂದ ಮರೆಯಾಗುತ್ತವೆ. (೯೩೯)

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.   (௯௱௪௰ - 940)
 

ಇಹಪರಗಳೆರಡರಲ್ಲಿಯೂ ಒಬ್ಬನನ್ನು ಕೀಳಾಗಿ ಮಾಡಿ, ದುಃಖದಿಂದ ಕಷ್ಟಕ್ಕೇಡು ಮಾಡೂವುದು ಅವನು ಬಯಸುವ ಜೂಜು; ಅದೇ ರೀತಿ, ಜೀವದ ಮೇಲಿನ ವ್ಯಾಮೋಹವೂ- (ಮನುಷ್ಯನ) ದುಃಖವನ್ನು ಹೆಚ್ಚಿಸಿ ಅವನನ್ನು ತೋದರೆಯಲ್ಲಿ ಸಿಲುಕಿಸುವುದು. (೯೪೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: ஸ்ரீ ரஞ்சனி  |  Tala: ரூபகம்
பல்லவி:
சூதினும் வறுமை தருவதொன்றில்லை - ஒரு
சுகமும் இல்லை துன்ப எல்லை

அநுபல்லவி:
தீதிதுவும் பொது மாதும் மதுவும் போல்
சிறுமை பல செய்து சீரழித்திடும்

சரணம்:
பகடை பன்னிரன்டு பாய்ச்சிகை உருண்டு
பாயும் தாயம் சீட்டாடுவார்
பண்பும் அற்றிட நண்பும் கெட்டிட
பணயம் வைத்திடக் கூடுவார்
மிகவும் ஒன்றெய்தி நூறிழப் பினும்
மீளும் நல்வழி காண்பரோ
மீண்டும் மீண்டுமே பொருளிழப்பார்
தூண்டில் மீன்களாய்ப் பரதவிப்பார்

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகியார்
கல்வி உணவுடைச் செல்வம் புகழ் நிறை
கருதும் ஐந்துமே அடைந்திடார்
அவல நிலையிலோர் கவளமாகிலும்
அருந்தியே பசி ஆறிடார்
ஆதலால் இந்தச் சூதின்மேல் வைத்த
ஆசையற விடுவீர்
குறளைத் தொடுவீர்
அருளைப் பெறுவீர்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22