ಸದ್ಭಾವನ

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.   (௯௱௮௰௧ - 981)
 

ಕರ್ತವ್ಯವೇನೆಂಬುದನ್ನು ಅರಿತು ಸದ್ಭಾವವನ್ನು ಪಡೆದಿರುವವರಿಗೆ ಒಳ್ಳೆಯದೆಲ್ಲವೂ ಸಹಜವಾದ ಕ್ರಿಯೆಯಾಗಿರುವುದೆಂದು ಹೇಳುವರು. (೯೮೧)

குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.   (௯௱௮௰௨ - 982)
 

ಸಜ್ಜನರ ಸುಖ ಬಾಳುವೆಯೆನ್ನುವುದು ಅವರ ಗುಣದ ಒಳಿತಿಂದಲೇ ಉಂಟಾಗುವುದು; ಮಿಕ್ಕ ಇಂದ್ರಿಯಗಳಿಂದ ಬರುವ ಸುಖ, ಬರಿಯು ಹೆಸರಿಗೆ ಮಾತ್ರ. (೯೮೨)

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்.   (௯௱௮௰௩ - 983)
 

ಪ್ರೀತಿ, ವಿನಯಶೀಲತೆ, ಉಪಕಾರ, ಪ್ರಸನ್ನತೆ, ಸತ್ಯಶೀಲತೆಯೂ ಸೇರಿದ ಐದು ಗುಣಗಳು, ಸದ್ಭಾವನೆ ಎಂಬ ಕಟ್ಟಡವನ್ನು ಆಧರಿಸಿ ನಿಂತಿರುವ ಆಧಾರಸ್ತಂಭಗಳು. (೯೮೩)

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.   (௯௱௮௰௪ - 984)
 

ಇತರ ಪ್ರಾಣಿಗಳನ್ನು ಕೊಲ್ಲದಿರುವ ಒಳ್ಳೆಯ ಗುಣವೇ ತಪಸ್ಸು; ಇತರರ ಕೆಡುಕನ್ನು ಎತ್ತಿ ಆಡದಿರುವ ಒಳ್ಳೆಯ ಗುಣವೇ ಸದ್ಭಾವನೆ. (೯೮೪)

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.   (௯௱௮௰௫ - 985)
 

ಬಲಶಾಲಿಗಳ ಸಾಮರ್ಥ್ಯವಿರುವುದು ಅವರು ತಗ್ಗಿ ನಡೆಯುವುದರಲ್ಲಿ; ಅದು ಸಜ್ಜನರು ತಮ್ಮ ಹಗೆಗಳನ್ನು ಪರಿವರ್ತಿಸುವ ಸಾಧನವೂ ಹೌದು. (೯೮೫)

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.   (௯௱௮௰௬ - 986)
 

ತಮಗೆ ಸಮಾನರಲ್ಲದವರಲ್ಲಿಯೂ ಸೋಲನ್ನು ಸ್ವೀಕರಿಸುವುದು, ಸದ್ಭಾವನೆಯೆಂಬ ಹೊನ್ನಿನ ಗುಣವನ್ನು ಅರಿಯುವ ಒರೆಗಲ್ಲು. (೯೮೬)

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.   (௯௱௮௰௭ - 987)
 

ತಮಗೆ ಅಹಿತವಾಗಿ ನಡೆದುಕೊಂಡವರಲ್ಲಿಯೂ ಹಿತವನ್ನೇ ಬಯಸದೆ ಹೋದರೆ ಅಂಥ ಸದ್ಭಾವನೆಯಿಂದ ಏನು ಸಾರ್ಥಕತೆ ಇದೆ? (೯೮೭)

இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.   (௯௱௮௰௮ - 988)
 

ಒಬ್ಬನಿಗೆ ಸದ್ಭಾವನೆಯೆನ್ನುವ ಬಲವು ಬಂದಾಗ, ದಾರಿದ್ರ್ಯವು ಕೂಡ ಅವಮಾನಕರವೆನಿಸುವುದಿಲ್ಲ. (೯೮೮)

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.   (௯௱௮௰௯ - 989)
 

ಸದ್ಭಾವನೆಗಳ ಕಡಲು ಎಂದೆನಿಸಿಕೊಳ್ಳುವವರು, ಪ್ರಳಯ ಕಾಲ ಬಂದರೂ ತಾವು ಅಚಲರಾಗಿ ಉಳಿಯುವರು. (೯೮೯)

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.   (௯௱௯௰ - 990)
 

ಸಜ್ಜನರ ಸದ್ಭಾವನೆಯು ಕುಂದಿದರೆ, ವಿಸ್ತಾರವಾದ ಭೂಮಿಯು ಕೂಡ ತನ್ನ ಭಾರವನ್ನು ತಾಳಿಕೊಳ್ಳಲಾರದು. (೯೯೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: கரகரப்பிரியா  |  Tala: ஆதி
பல்லவி:
குணநலமே பரவும் சான்றாண்மை
கொள்கை அறிந்தே செய்யும் நாளும் தன் கடமை

அநுபல்லவி:
குணநலம் சான்றோர் நலனாகவே விளங்கும்
கொல்லாமை பிறர் தீமை சொல்லாமையும் வழங்கும்

சரணம்:
அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்து சால்பும் ஊன்றிய தூணாகும் மேன்மையது
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பென்னும் குறட்பரல்

இயற்கை ஊழி பெயர்ந்தாலும் தாம் பெயரார்
இன்மை ஆயிடினும் திண்மையே உடையார்
எண்ண மேவும் கடலே
என்னும் வாழ்வின் பொருளே

ஈடில்லாத நிறை கேடில்லாத பொறை
கூடி வாழும் முறை தேடியாரும் வரும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22